Monday, August 6, 2018

வயிற்று வலியா?-என்ன பிரச்சனை என்று எப்படி அறிந்து கொள்வது?

வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம். 

சிறிது விசய ஞானத்தோடு வயிறு வலியினை புரிந்து கொண்டால் மன பயம் விலகும்.



வயிறு ஒரு பை மாதிரி. முக்கிய உறுப்புக்களான - கிட்னி, பித்த பை , கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கணையம் , சிறு நீர்பை, கர்ப்பப்பை,சினைப்பை (பெண்களுக்கு) மற்றும் விந்துபை (ஆண்களுக்கு), என்று அனைத்து ராச உறுப்புகளும்  வயிற்றில் உள்ளன.

ஆனால், இதை  எப்படி நீங்கள்  தெரிந்துகொள்ளலாம் ? 



வயிற்றின் மேலிருந்து கீழ் வரை மூன்று பகுதியாவும் மற்றும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரகற்பனை செய்து பார்க்கவும்.

அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும். 

அதாவது மேல், நடு (தொப்புள் பகுதி) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் பகுதி) மற்றும் வலது பகுதி.

1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா -  கல்லீரல்  அல்லது  பித்தப்பை பிரச்சனை

2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால்  - அல்சர் அல்லது வயிற்று புண் .

3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு அல்லது கிட்னி பிரச்சனை 

4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால்  - உணவு ஒவ்வாமை  அல்லது ஃபூட் பாய்சன்.

5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,

6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போது  என்ன பிரச்சனைன்னு என்று  தெரிந்து கொண்டீர்கள், 
அப்பிரச்சனைக்கு திர்வு காணுங்கள்! 

Sunday, August 5, 2018

பல் சொத்தை - வீட்டு வைத்தியம்

பல் சொத்தையால் அவதியா ??? 

எளிய வீட்டு  வைத்தியம் மற்றும் நிரந்தர தீர்வு!!!

பல் சொத்தை  முதல் கட்டத்தில் இருந்தால்,  கீழ்கண்ட வீட்டு வைத்திய குறிப்பு 100% குணமடைய செய்யும் .



கீழ்கண்ட வைத்திய முறைகளை தவறாமல் செய்தால் குணமடைவது உறுதி. மேலும் கீழ்கண்ட எதாவது ஒரு முறையை வரம் தோறும் கடை பிடித்ததை பல் சொத்தையாவதிலிருந்து விடுபடலாம் அல்லது பாதுகாத்து கொள்ளலாம் .


1. ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்தவுடன் 3-5 கொய்யா இலைகளை கழுவி நன்கு மெல்லவும் . கொய்யா இலைகளை மெல்லும் பொது வாயில் எச்சில் நன்கு ஊறும். இந்த சாறு மற்றும் நுண்ணிய இலைகளை வாயில் 15-30 நிமிடம் வைத்திருக்கவும் . பிறகு வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் போடி மற்றும் உப்பு சேர்த்து 5-10 முறை வாய்  கொப்பளிக்கவும் . 





2. புளிய இலைகளையும், மஞ்சள் பொடியும் மற்றும் உப்பு  சேர்த்து  200 மில்லி நீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, சிறுது சூடு ஆறியவுடன் 10-20 முறை வாய் கொப்பளிக்கவும். 







3. இரண்டு கிராம்பு அல்லது லவங்க பூவை வாயிலிட்டு நன்றா மென்றால் வாயில் எச்சில் நன்றா உறும், பிறகு 10-20 நிமிடம் இந்த சாற்றை வாயில் வைத்து துப்பி விடவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.


4. காலை மற்றும் இரவில் கீழே குறிப்பிட்ட மூன்று பொருட்களை கொண்டு பல்துலக்கவும்.
கடுக்காய் பொடி, மஞ்சள் பொடி  மற்றும் உப்பு மூன்றையும் சரியளவு கலந்து பல்பொடியாக உபயோகிக்கவும் . 




மேற்குறிய முறைகளை எந்த வரிசையில் வேண்டுமானாலும்  செய்யலாம். ஆனால் 4 முறைகளையும் ஒருமுறையாவது ஒரு நாளைக்கு கட்டாயம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் 
lakshmi_mailme@rediffmail.com

நலம்பெற வாழ்த்துக்கள்!!!

Total Pageviews

Followers