Monday, January 23, 2017

சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு உதவவில்லை என ரஜினியை வசைபாடிய மக்கள்
கபாலி வந்ததும்
2000 ரூபாய் கொடுத்தும் டிக்கெட் கிடைக்கவில்லை என வருத்தபடுகின்றனர்
கலாம் இறுதி ஊர்வலத்தில் தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக(மற்றவர்கள் மணம் புண்படுத்தும் படி) கொண்டாடிய தனுஷை திட்டிய இளைஞர்கள்,
இன்று
அவர் படத்திற்கு போஸ்டர் ஒட்டுகின்றனர்.
நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட பொதுமக்களிடம் பணம் வசூலிக்க நேரம் இருக்கு, ஆனால்
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக குரல்(விஜய் சேதுபதி தவிர்த்து)கொடுக்க யாருக்கும் நேரமில்லை..
சிவாகார்த்திகேயன் தன்னுடைய தயாரிப்பாளருக்கு காரு இல்லை என்று கண்ணீர் விட்டதும் விஷால்,சிம்பு ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் ஊடகம் அதற்கும் ஒரு படி மேலே போய் நடிகனயை கூப்பிட்டு வச்சு நிகழ்சசி நடத்துகின்றன. அந்த தயாரிப்பாளர் ரெமோ படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு வழங்கியது 5கோடிக்கும் மேல்.. அதை வைத்து 100 கார் கூட வாங்கலாம்.. அந்த ஹீரோவே கண்ணீர் விட்டதற்கு பதில் கார் வாங்கி கொடுத்திருக்கலாம். எல்லாமே நடிப்புங்க, இனிமேலும் நடிகனை நம்பி காலத்தை கடத்தாதீர்கள். இப்பதிவு யார் மனதையும் காயப்படுத்த பதிவிடவில்லை,,,
என் தமிழ் இனம்
"ரசிகன்" என்ற பெயரில் யாரிடமும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை.
அன்று வெள்ளைகாரன் நம்மை அடிமையாக்கினான்,
இன்றோ சில நடிகர்களுக்கு நாம் அடிமையாக வாழ்கிறோம்....
திரையுலகம் இல்லாவிட்டால், தமிழ்நாடு இருளாகாது.
விவசாயம் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் யாரும் உயிர் வாழ முடியாது..
திரையில் தோன்றுபவனுக்கு கோடிகளில் சம்பளம்,
உழைத்த உழவனுக்கு உடுத்த உடையில்லை யாம்..
ரசிகனால் நடிகர் வாழ்கிறார்கள்,,
நடிகரால் ரசிகன் வாழ்கிறானா????????
நடிகர்,நடிகையை காண வந்த கூட்டம் ,
விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வரவில்லை,காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வரவில்லை,,..
2000 ரூபாய்,1000 ரூபாய் கொடுத்து முதல் காட்சி அந்த நடிகர்/நடிகை படம் பார்த்தேன் என பெருமைப் படுகிறோம்,,, உங்கள் ஊரில் எத்தனை ஆசிரமம் இருக்குன்னு தெரியுமா????,
ஒரு சொட்டு பாலுக்காக எவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்கள்'னு தெரியுமா??,
எத்தனை முதியோர்கள் அடுத்த வேளை உணவு கிடைக்குமா,கிடைக்காதா என்று காத்து கொண்டிருக்கிறார்கள்..
திரைப் படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே,,,,
நீங்கள் கூறலாம் திரையுலகத்தால் பல ஆயிரம் பேர் வாழ்கிறார்கள் என்று.
உண்மை தான்,
ஆனால் சினிமா வால் எத்தனை கலை அழிந்து விட்டது என உங்களுக்கு தெரியுமா??
எத்தனை கலைஞர்கள் தன் வாழ்க்கையை தொலைத்தார்கள் என தெரியுமா??
அழிந்த கலைகள்;
தோல்பாவை கூத்து,தெரு கூத்து,வீதி நாடகம்,மேடை நாடகம், கரகாட்டம்,
ஒயிலாட்டம்,
சிலம்பாட்டம்,
புலியாட்டம்,
தப்பாட்டம்,இன்னும் நிறைய......
முகம் தெரியாத ஒருவருக்காக என் வாழ்நாளை வீணாக்க விரும்பவில்லை,,,
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே,
அப்பா,ஜோக்கர்,
இறுதிசுற்று,
ஆண்டவன் கட்டளை போன்ற சிறந்த படங்களை திரைஅரங்கில் சென்று பாருங்கள்,பொழுதுபோக்காக..
கலைக்கு மட்டும் ரசிகனா இருங்கள்,
கலைஞனுக்கு இல்லை...
தன் வாழ்நாள் முழுவதும் கவிதைக்காகவும்,
விடுதலைக்காகவும் போராடிய "பாரதி" பிறந்த மண்ணுங்க இது..
தான் இறக்கும் தருவாயில் கூட",நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்" என்று கூறிய "திரு.வி.க" வாழ்ந்த தமிழ்நாடு நம் பூமி,
என் கல்லறையில் "தமிழ் மாணவன் இங்கு உறங்கிக் கொண்டிருக்கிறான்" என எழுத சொல்லி நானும் தமிழன் என பெருமை பட்ட ஆங்கில கவிஞர் ஜி.யு.போப் வளர்த்த தமிழ் மொழி நம் மொழி.....

Total Pageviews

Followers