Tuesday, October 11, 2011

கொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி!


முதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன்.
 கொசு ஏன் நம்மை கடிக்கிறது?

  கொசுக்கள்  முட்டை இடும்போது நிறைய புரத சத்து தேவைப்படுகிறது. தனக்கு தேவையான புரத சத்தினை எடுத்துகொள்ளவே நம்மை எல்லாம் கொல்லாமல் உட் கொள்கிறது. 

  இந்த கொடுமையிலிருந்து விடுபட நிறைய  பேர் நவீன கொசுவத்திகளை உபயோக படுத்துகிறார்கள்...
 இதன் விளைவு நமக்கு மிகவும் ஆபத்தான சூழலில் நம்மை  இட்டுச்செல்கிறது.

லிகுடடோர்களும், கொசுவத்திகளும் மெல்லமெல்ல மனிதர்களை கொல்லும் விஷம் என்று தான் சொல்லவேண்டும்.
  
கொசுக்களோ உருவத்தில் சிறியது விரைவில் இறந்துவிடுகிறது. மனிதர்கள் உருவத்தில் பெரிவர்கள் பல பல  செல்கள் அழிய நேரிடுகிறது. இதன்  விளைவு  மருத்துவர்கழலும் கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகளை மனிதன் சுமக்க நேரிடுகிறது.

இத்தனை பெரிய செய்தியை சுருக்கமாக இங்கு கொடுத்துள்ளோம்.

 கொசு தொல்லையிலிருந்து விடுபட ஒரு சில மாற்று வழிகள்!!!

  • எப்போதும் உடுத்தும் துணிகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவும்.
  • மின்னூட்டம் செயப்பட்ட கொசு மட்டையை பயன்படுத்தவும்.
  • உறங்கும் முன் சிறிது நல்லெண்ணெய் எடுத்து முகம், கை, கால்களில் தடவி கொள்ளவும்.
  • வசும்பு மற்றும் ஆரஞ்சு பழ தோலினை உலர வைத்து நன்கு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியினை உபயோகபடுத்தி தூபம் போடவும்.
 " இந்த முறையினை பின்பற்றினால் கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்." 

No comments:

Post a Comment

Total Pageviews

Followers