Thursday, January 24, 2013

மசாஜ் தெரபி


மூலிகை எண்ணெய் பயன்படுத்தி உடல் மசாஜ் திரு. கருணாகரன்  அவர்களால் பாரம்பரிய வகையில் மசாஜ் கொடுக்கப்படுகிறது.
உடலின் வெவ்வேறு பகுதிக்கு வெவ்வேறு முறையான தொடு  சிகிச்சைகளையும்,  மசாஜ் முறைகளையும் பயன்படுத்துகிறார். மற்றும் ஒவ்வொரு பாகத்திற்கும் கீழ்கண்டவாறு முறையான எண்ணெய்  வகைகளை பயன்படுத்துகிறார்.

தலை பகுதிக்கு பொன்னாங்கண்ணி, கரிசிலாங்கண்ணி, வெந்தயம், கருவேப்பிலை, ஆவாரம் பூ மற்றும் ஆவாரம் இலைகள் போன்ற மூலிகைகளை பயன்படுத்தி அவர்களே தயாரிக்கின்றனர்.

உடலின் முன் பகுதிக்கு சந்தனாதி தைலம் மற்றும் சில மூலிகைகளை பயன்படுத்தி  மசாஜ் செய்கிறார்.

உடலின் பின்  பகுதிக்கு மற்றும் இடுப்பின் கீழ் பகுதிக்கு வேறு  மூலிகை எண்ணெய்  வகையை பயன்படுத்தி மசாஜ் செய்கிறார்.

please refer the link for further detail
http://atchayapaathiram.com/2013/01/herbal-based-oil-massage-at-your-door.html

Tuesday, January 8, 2013

ஆனந்தமே இறைவன்

உடல் ஒரு ஜடம்.
மனம் உடலை இயக்குகிறது.
மனம் 2 வகைப்படும்.
1]உடலைச் சார்ந்த மனம் 
2]ஆத்மா [உணர்வு] சார்ந்தமனம்
உடலை ச்சார்ந்த மனம் உணர்ச்சி வகையை  சேர்ந்தது,
ஆத்மாவை சார்ந்த மனம்உணர்வை  சேர்ந்தது,
மனதினை செம்மை ஆக்கினால் ,
உணர்ச்சியை நிர்வாகம் செய்தால்,ஆனந்தமாக வாழலாம்.
நாம் அனைவரும் ஆனந்தமாக வாழ பிறந்தவர்கள்.
ஆனந்தமே  இறைவன்.

மேதைகள் காட்டிய பாதைகள்!

மேதைகள் காட்டிய பாதைகள்!



நான்கு வயது வரை 
பேசுவதற்கு 
வாயைத் திறக்கவில்லை 
ஏழு வயது வரை 
எழுத்துக் கூட்டிகூட  
படிக்க முடியவில்லை
பெற்றோரும் ஆசிரியரும் 
மண ஊனமுற்றவன் என்று 
முடிவு செய்தார்கள் 
அந்தச் சிறுவனே 
இயற்பியலின் 
பொதுச் சார்பியல் கோட்பாடு 
கண்டறிந்தமைக்கு 
நோபல் பரிசு பெற்ற 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

எந்த கற்பனை வளமும் 
எந்த அரிய சிந்தனையும் 
இல்லாதவர் என்று 
பத்திரிக்கை ஆசிரியரால் 
பதவி நீக்கப்பட்டவரே 
உலகம் முழுவதும் 
திரைப்படம் தீம் பார்க் என்று 
பில்லியன்கள் குவித்த 
வர்த்தக நாயகர் வால்ட் டிஸ்னி.

பள்ளிப் படிப்பிலும் 
பின்தங்கி இருந்தவர் 
குடும்பப் பண்ணையை 
நிர்வகிப்பதிலும் 
தோல்வியைத் தழுவியவர் 
அவரே அறிஞர் ஐசக் நியுட்டன்
பிரபஞ்ச ஈர்ப்புஇயக்கவியல், 
ஒளியியல் விதிகளை 
உலகத்துக்கு அறிவித்தவர.

எதையும் கற்றுக்கொள்ளத் 
தெரியாத முட்டாள் என்று 
ஆசிரியர்களால் 
புறக்கணிக்கப்பட்டவன் 
இரண்டு முறை வேலையிலிருந்து 
புறக்கணிக்கப்பட்டவன் 
எதற்கும் அருகதையற்றவன் என்று 
எல்லோருக்கும் ஏளனமானவன்  
ஆயிரம் முறைகளுக்குமேல் 
ஆய்வு தோல்வியடைந்தாலும் 
அயராமல் வெற்றியடைந்து 
மின்சார விளக்கை கண்டறிந்து 
மேதையானவர் தாமஸ் எடிசன்


தோல்வியடையும் போது
துவண்டு போகாதே!. என் தோழா!
இந்த மாமேதைகளை 
மனதில் நினைத்துக் கொள்!
இந்த மந்திரத்தை 
மனதில் உச்சரித்துக் கொள்!

“சில நேரங்களில் தோல்விதான் 
வெற்றிக்கு முதல்படியாக இருக்கும்

Total Pageviews

Followers