Wednesday, April 17, 2013

பைரவ சஷ்டி கவசம்!!!




வணங்குவோர்க்கு வாழ்வு தரும்
வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும்
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்
நினைத்தாலே நிம்மதி தரும்
நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
பக்தர் பரவசமுற பலன் தரும்
பைரவர் திருவடியே கதி
சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்
திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர்
அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்
சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்
சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்
சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்
வருக வருக வடுகபைரவா வருக
வளம்தர வருக வஜ்ரபைரவா வருக
வருக வருக உக்கிரபைரவா வருக
உவகைதர வருக உலகபைரவா வருக
பைரவி போற்றும் பைரவா வருக
ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக
ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக
ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக
காலத்தின் நாயகா கால பைரவா வருக
கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக
நலம் தரும் நரசிங்க பைரவா வருக
நாளும்காக்கும் நாக பைரவா வருக
கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக
ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக
தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக
மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக
அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக
குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக
உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக
திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக
சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
ருசியான  உணவுதரும் ருருபைரவா வருக
சந்தோஷம் தரும் சம்கார  பைரவா வருக
பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக
வருகவருக வரமருளும் வரதபைரவா வருக
தருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக
பருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
பெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக
நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக
சதிராடும் சர்ப்ப பைரவா வருக
ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக
பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக
சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
முப்புரமெரி செய் முக்கண்ணும்
முகவழகு கூட்டும் நாசியும்
சீற்றம் காட்டும் சிங்க பல்லும்
இடது செவியில் பொன்னாபரணமும்
இன்பமூட்டும் இள நகையும்
அழகிய தோளும் அற்புத அழகும்
மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்
எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
இளமை காட்டும் வாலிபமும்
மணி ஓசை தரும் கிண்கிணியும்
கையிலே கபாலமும் சூலமும்
தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்
ஏற்றம் தரும் தோற்றமாய்
பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
பரவசம் தர வருகவே வருகவே
மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
உய்ய வழிகாட்டும் உத்தமரே
பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
சேய் மகிழ விரைந்து வருவீரே
ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
அன்னை பார்வதி மனம் நொந்திடவே
ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி
அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்
தலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்
தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே
பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே
கற்றவர் போற்றும் காசியாம்
பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
எங்கும் திரிந்தான் பரமன்
காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே
மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே
ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை
வீடு தேடியொரு வேளையிலே
பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்
தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே
எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
அழிந்திடத் தான் வேண்டுமென்றே
பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே
பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்
காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்
கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்
மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்
எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்
முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
ஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே
இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
இடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்
விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
கபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு
கண்ணான கணவன் மயங்கிவிழவே
கதறி அழுதிட்டாள் மகாலட்சுமி
கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்
மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ
மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.
அந்தகாசுரனென்னும் புதல்வனும் அசுரனானான்
அகிலத்தையே ஆட்டி படைத்தான்
அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்
அவனை அழித்து அல்லல் அகற்றினார்
மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்
இனியொரு விதி செய்தே மக்களை காக்க
கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
மதிகெட்டவர்களை அழித்திட்டார்.
முண்டகன் என்றொரு கொடியவன்
கண்டபடி தந்தான் துன்பங்களை
அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்
பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே
எண்ணங்களிலே மாற்றம் தரும்
இதயத்திலே எழுச்சி தரும்
அடியவருக்கு அருள்புரியும்
பைரவ புராணத்தை பாடிடுவோம்
காலத்தின் நாயகன் கால பைரவனென்றே
ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே
விதியும் அவனே வெற்றியும் அவனே
வேதமும் அவனே வேதநாயகனும் அவனே
அட்டவீரட்ட தலங்கள் அற்புதத்தலங்கள்
ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
அம்பலவாணன் பைரவரூபமான இடங்கள்
அகிலத்தோரை காத்திட தலங்கள்
தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
ஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்
அத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே
எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
ஐந்து தலையரசே ஆகாசபைரவரே
அல்லல் நீங்கிட வருவீரே
தலைதனை தராபாலன பைரவர் காக்க
கேசந்தனை கேசர பைரவர் காக்க
நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க
கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க
செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க
நாசிதனை நர்த்தன பைரவர் காக்க
வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க
நாக்கினை நானாரூப பைரவர் காக்க
கழுத்தினை கராள பைரவர் காக்க
தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க
கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க
மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க
விலாவினை விருபாச பைரவர் காக்க
வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க
இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க
மறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க
தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க
முழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க
பாதமிரண்டும் பரம பைரவர் காக்க
விரல்களைத்தும் விஜய பைரவர் காக்க
இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி
சங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி
சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி
உயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி
உன்மத்தம் போக்குவாய் போற்றி
குருட்டை நீக்குவாய் போற்றி
கர்ப்பதோஷம் போக்குவாய் போற்றி
உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி
ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி
இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி
சளித்தொல்லை போக்குவாய் போற்றி
சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி
விஷபயம் போக்குவாய் போற்றி
பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி
விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி
பகைமையை அழிப்பாய் போற்றி
உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி
அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி
தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி
முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி
நல்லதொரு துணைதருவாய் போற்றி
துணையின் துன்பம் களைவாய் போற்றி
சந்தானபாக்கியம் தருவாய் போற்றி
புத்திரதோஷம் போக்குவாய் போற்றி
கடன் தொல்லை நீக்குவாய் போற்றி
களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி
என்றும் புகழ் தருவாய் போற்றி
ஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி
பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி
பில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி
கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி
பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி
சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக
பாசமிகு பைரவமூர்த்தியே வருக
காலனைவிரட்டும் கால பைரவா வருக
ஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக
கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக
பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக
சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக
சந்ததிதரும் சந்தான பைரவா வருக
ஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக
சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக
வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக
நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக
சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக
தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக
விசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக
ஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக
குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக
கல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக
மேன்மை தரும் மேகநாத பைரவா வருக
சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக
கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக
அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக
சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக
பூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக
தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக
காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக
லாபம் தரும் லோகபால பைரவா வருக
பூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக
ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக
கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக
அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக
தட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக
வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக
அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக
பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
குலம் காக்கும் குல பைரவா வருக
சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக
ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக
சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக
சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக
கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக
குற்றம் களையும் குலபால பைரவா வருக
சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக
கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக
புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக
லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக
நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக
சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக
கஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக
பிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
மண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக
விருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக
சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக
கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக
பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக
எதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக
சோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக
பீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக
பூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக
ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக
பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக
வினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக
நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக
சக்திக்கும்  பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக
அட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக
பைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக
பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக
ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக
முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக
பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்
சண்முகசுந்தரம் பாடிய கவசம்
நவபைரவர் அருளும் நற்கவசம்
பைரவ சஷ்டி கவசம் இதனை
செப்பிடுவோர் ஜெகமாள்வர்
ஓதுவோர் ஓங்குபுகழ் பெறுவர்
கூறுவோர் கூற்றனை வெல்வர்
வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
சொல்வோர் சொத்துக்களை பெறுவர்
கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்
சரணம் சரணம் பைரவா சரணம்
சரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்
சரணம் சரணம் திருவடி சரணம்

இயற்றியவர்:பண்ணாரிதாசன் என்ற சோம.சண்முகசுந்தரம்,சேலம்

ஓம்சிவசிவஓம்

Wednesday, April 10, 2013

உலகவரலாற்றில் முதன்முறையாக “ருத்ராட்ச உபநிஷத்” பயிற்சிவகுப்பு!!!

கலியுகம் தோன்றி ஐந்தாயிரத்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன;சிவமணி எனப்படும் ருத்ராட்சமானது சைவசமயத்தின் அடையாளச்சின்னங்களுள் ஒன்றாக இருக்கிறது;சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை நமது இந்து தர்மத்தின் ஷண்மதங்களிலும் ருத்ராட்சம் முக்கிய வழிபாட்டு அம்சமாகப் போற்றப்பட்டு வந்தது;
காலபைரவர் சிவவடிவத்தில் கண்களை மேல்நோக்கித் திறந்த நிலையில் தனது தானைத்தலைவனான சதாசிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்;அந்த கடும் தவத்தின் விளைவாக,சிவனருளால் காலபைரவப்பெருமானின் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் பூமியில் இன்றைய நேபாளத்தில் விழுந்தன;அப்படி விழுந்தவை ருத்ரனது அட்சமாக ருத்ராட்சமரங்களாக விளைந்தன;அவைகளே இன்றும் ருத்ராட்சம் என்று போற்றப்படுகிறது.
ருத்ராட்சத்தில் ஒரு முகம் முதல் முப்பத்தி இரண்டு முகங்கள் வரை இருக்கின்றன;இதில் ஒரு முகத்தைப் பார்த்தவர்கள் மிகச் சிலரே! போலிகள் நிறைய உலவுகின்றன;எளிதில் எங்கும் மலிவு விலையில் கிடைப்பது ஐந்துமுக ருத்ராட்சங்களே!!! நாம் அனைவருமே ஐந்துமுக ருத்ராட்சத்தை அணியலாம்;பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகள் கல்வியில் முழுக்கவனம் செலுத்த ஆறு முக ருத்ராட்சத்தை அணிய வேண்டும்.பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும்,கர்ப்பக் காலத்திலும்,பிரசவகாலத்திலும்  ருத்ராட்சத்தை அணிந்திருக்கலாம்;கழற்ற வேண்டிய அவசியமில்லை;ருத்ராட்சத்தை அணிபவர் பின்பற்ற வேண்டிய ஒரே ஒரு கொள்கை அசைவம் சாப்பிடவேக் கூடாது;பிறந்த குழந்தை முதல் நூறு வயதுப் பெரியவர்கள் வரையிலும் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம்;ருத்ராட்சத்தை சிகப்புக் கயிற்றில் மட்டுமே கட்ட வேண்டும்;இல்லத்தரசிகள் தாலிக்கொடியோடு சேர்த்துக் கட்டலாம்;ருத்ராட்சமாலை அணிவதற்குத்தான் பலவிதமான நியமங்களைப் பின்பற்ற வேண்டும்.
பல ஜன்மங்களாக புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் ருத்ராட்சத்தை அணியும் அதிர்ஷ்டம் உண்டாகும்;ருத்ராட்சம் அணிவது பற்றி பெரும்பாலும் போலி மூடநம்பிக்கைகளே நம்மிடையே உலவுகின்றன.இந்தமூட நம்பிக்கைகளை அனுபவமுள்ள ஜோதிடர்களே நம்புவதுதான் மிகவும் வருத்தமான நிஜம் ஆகும்.ருத்ராட்சம் அணிந்தவர் மரணமடைந்தால்,அவரை ருத்ராட்சத்தோடு சேர்த்தே புதைக்க அல்லது எரிக்க வேண்டும்;ருத்ராட்சம் அணிந்தவர் நிச்சயமாக ருத்ர உலகத்திற்குப் பயணிப்பார்.ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களை பேய்,பிசாசு,துர்தேவதைகள்,துஷ்டசக்திகள்,பில்லி,சூனியம் அண்டாது;
இவ்வளவுச் சிறப்பு மிக்க ருத்ராட்சம் பற்றிய பல மறைக்கப்பட்ட தெய்வீக ரகசியங்களின் தொகுப்பே ருத்ராட்ச உபநிஷத் எனப்படுகிறது.இந்த ருத்ராட்ச உபநிஷத்தின் தொகுப்பை ஒரு நாள் பயிற்சி வகுப்பாக நமக்கு போதிக்க நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் சம்மதித்திருக்கிறார்.கடந்த ஐந்தாயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பல சிவரகசியங்கள் இந்த ஆன்மீகப்பயிற்சி வகுப்பில் போதிக்கப்பட இருக்கிறது.மே 2013 இல் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரத்தில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பிற்கு குருதட்சிணை உண்டு.
இந்த ருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் கற்க இருக்கும் சிவரகசியங்களை தினசரிப்பயிற்சியாகச் செய்து வந்தால்,உங்களின் இறைவழிபாட்டிற்கான பலன்கள் விரைவில் கிட்டும்;மேலும் பல தெய்வீக ரகசியங்களை நீங்கள் அடையலாம்;சித்தர் தரிசனம்,வறுமை நீக்கம்,கர்மவினை நீக்கம் போன்றவைகளையும் நீங்கள் எட்டுவீர்கள்:அனைத்தையும் வெளிப்படுத்த குருமுகமாக உத்தரவு கிட்டவில்லை;மன்னிக்கவும்.
திருஅண்ணாமலையில் தெய்வீக விபூதிப்பயிற்சிவகுப்பு,கோவையில் நடந்த அதன் மறு வகுப்பு,ராஜபாளையத்தில் நடத்தப்பட்ட ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சிவகுப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் அனுமதி உண்டு;அவர்கள் செய்ய வேண்டியது மின் அஞ்சல் மூலமாக அவரவரின் பெயர்,செல் எண்,போட்டோ,தற்போது வசிக்கும் ஊர்,சொந்த ஊர் போன்றவைகளை aanmigakkadal@gmail.comக்குத் தெரிவிக்க வேண்டும்;Subject இல் நீங்கள் எந்த ஊரில் நிகழ்ந்த பயிற்சிவகுப்பிற்கு வருகைதந்தீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும்.உதாரணமாக,Annamalai Viboothi Student/Coimbatore Viboothi Student/Rajapalayam Athma palam Student என்று தெரிவிக்க வேண்டும்.Proxy Studentக்கு அனுமதி கிடையாது;
புதியவர்களுக்கு(பழையவர்களுக்கும்) பின்வரும் நிபந்தனைகள் பொருந்தும்:


1.வயது 21 நிரம்பியிருக்க வேண்டும்.


2.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டிருக்க வேண்டும்.


3.ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.(குழந்தைகளை அழைத்துவராமல் இருப்பது உத்தமம்)


4.Subjectஇல்  Ruthratcha Applicant என்று குறிப்பிட்டு,உங்களது பெயர்,போட்டோ,செல் எண்,பிறந்த ஊர்,தற்போது வசிக்கும் ஊர்,ஜாதக நகலை அனுப்பி வைக்க வேண்டும்.
இதில்,ஏதாவது ஒன்றுவிடுபட்டாலும்,உங்களது விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது; தம்பதியாக விண்ணப்பித்தால்,இருவரும் இருக்கும் போட்டோவை அனுப்ப வேண்டும்; ஜாதகம் இல்லாதவர்கள்,ஜாதகம் இல்லை என்று குறிப்பிடவும்;


5.இந்த ருத்ராட்ச உபநிஷத் பயிற்சிவகுப்புக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டால்,இங்கே பயிலும் சிவரகசியங்களை எனது வாழ்க்கைத் துணை,வாரிசுகளைத் தவிர,வேறு எவருக்கும் எப்போதும்,எந்த வடிவிலும் உபதேசிக்கமாட்டேன் என்ற உறுதிமொழியில் கையெழுத்திட்டப் பின்னரே,வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவர்.


6.தினசரி சிவ வழிபாடு அல்லது ஸ்ரீகால பைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு அல்லது ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.வெறும் ஆர்வக் கோளாறுடன் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.அனுப்ப வேண்டிய முகவரி:aanmigakkadal@gmail.com 
உங்களது விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித்தேதி:30.4.2013


தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பயிற்சி நடைபெறும் இடம் & ஊர்,நாள்,குருதட்சிணை போன்றவைத் தெரிவிக்கப்படும்;


தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வரும்போது ஜாதகநகல்,இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோக்கள்,குருதட்சிணையைக் கொண்டுவர வேண்டும்;


தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாம் மட்டுமே வர வேண்டும்;துணைக்கு வருவோருக்கு பயிற்சி அரங்கிற்கு உள்ளே அனுமதி கிடையாது;


நெருங்கிய நண்பர்களை அழைத்து வந்தால் அவர்களுக்கு ஒருபோதும் வகுப்புக்குள் அனுமதி கிடையாது;


 பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பு:ஆன்மீகக்கடல் அறக்கட்டளை,ராஜபாளையம்.
 குறிப்பு:பெரும்பாலான  வாசக,வாசகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஏப்ரல் 2013 இல் நடைபெற வேண்டிய பயிற்சி வகுப்பை மே 2013க்கு தள்ளி வைத்துவிட்டோம்;வீட்டில் தமது குழந்தைகள் ஆண்டுத் தேர்வுகளுக்குத் தயாராவதால்,இந்த வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்கிறது.

ஓம்சிவசிவஓம்

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி!!!

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி!!!

 நன்றிகள் 

http://www.aanmigakkadal.com



ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண மகாகணபதி தியானம்
ஸ்வர்ணாத்ரெள ஸ்வர்ண கேஹே மகுடே மண்டபேரத்னபீடே
பூர்ணா நந்தம் நிஷண்ணம் கரிவரதனம் ஸ்வர்ணவர்ணம் திரிநேத்ரம் ஐ
ஹஸ்தை: பாசாங்குசேஷ்டான அபயதன கடெள பிப்ரதம் சந்தர மெளலிம்
பக்த க்ஷீப்ர ப்ரஸாதம் கணபதி மநிசம்நெளமி ஸாவார்த்த ஸித்யை


இந்த மந்திரத்தை தினமும் ஆறுமுறை ஜபிக்க வேண்டும்;அதன்பிறகே,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008போற்றியை ஜபிக்க வேண்டும்.

ஏனெனில்,பிரபஞ்சத்தில் செல்வ வளத்தை நிர்வகிக்க ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரால் தோற்றுவிக்கப்பட்ட முதல் படைப்பு சொர்ணாகர்ஷண கணபதி ஆவார்.எனவே,இவரை வழிபட்டப் பின்னரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டைத் துவக்க வேண்டும்.


ஓம் அகத்தியரின் துதியால் மகிழ்ந்தவரே போற்றி
ஓம் அகந்தையை அழித்தவரே         போற்றி
ஓம் அகமகிழச் செய்பவரே            போற்றி
ஓம் அகத்தூய்மை கொண்டவரே       போற்றி
ஓம் அகிலாண்ட கோடியே            போற்றி
ஓம் அக்கிரமங்களை அழிப்பவரே      போற்றி
ஓம் அக்னிச் சொரூபனே             போற்றி
ஓம் அக்னிபைரவரே                 போற்றி
ஓம் அசுரனின் மேல் ஆடுபவனே     போற்றி                
ஓம் அகத்தினை இயக்குபவரே                       போற்றி             10
ஓம் அசுரர்களை அழித்தவரே          போற்றி
ஓம் அடங்காரின் அழிவே              போற்றி
ஓம் அடியேனை ஆள்பவரே           போற்றி
ஓம் அடியாரின் அடிமையே           போற்றி
ஓம் அடியவர்க்கு அடியவரே         போற்றி
ஓம் அடியார்க்கு அமுதமே            போற்றி
ஓம் அடியார்க்கு அமுததே            போற்றி
ஓம் அடியவர்களை அரவணைப்பவரே போற்றி
ஓம் அடைக்கலம் அருள்பவரே      போற்றி
ஓம் அட்டபைரவர்களாக வருவோரே போற்றி         20
ஓம் அட்சரதேவரே                போற்றி
ஓம் அட்டசித்திகள் கொடுப்பவரே   போற்றி
ஓம் அணிமா மலரே              போற்றி
ஓம் அணுவிலும் உள்ளவரே       போற்றி
ஓம் அண்டத்தின் அணுவே        போற்றி
ஓம் அண்ணாந்த பார்வையுடையவரேபோற்றி
ஓம் அண்டபகிரண்டமானவரே      போற்றி
ஓம் அதிமதுர குணநாயகரே        போற்றி
ஓம் அத்தா                      போற்றி
ஓம் அத்திக்கருளிய அரசரே       போற்றி           30
ஓம் அந்தரங்க சக்தியே              போற்றி
ஓம் அபய நாயகரே                 போற்றி
ஓம் அபயமளிப்பவரே               போற்றி
ஓம் அபிபூதமாயை அறுப்பவரே       போற்றி
ஓம் அபிமானம் ஆனவரே           போற்றி
ஓம் அபிஷேக வல்லவரே           போற்றி
ஓம் அபிஷேகப் பிரியரே             போற்றி
ஓம் அப்பப் பிரியரே                போற்றி
ஓம் அப்பரே                       போற்றி
ஓம் அமரருக்கு அருள் செய்தவரே    போற்றி                40
ஓம் அமுதத்தை வழங்கியவரே         போற்றி
ஓம் அமுதக்கடலே                   போற்றி
ஓம் அமுதமே                       போற்றி
ஓம் அமிர்த கரும்பே                 போற்றி
ஓம் அமைதிவடிவே                  போற்றி
ஓம் அமுதம் அருளியவரே            போற்றி
ஓம் அமுத அன்பரே                 போற்றி
ஓம் அம்பிகைக்கு இன்பம் அருள்பவரே போற்றி
ஓம் அரக்கர்களை அழித்தவரே        போற்றி
ஓம் அரவிந்த மலரை விரும்புபவரே    போற்றி               50
ஓம் அரசருக்கு அரசரே             போற்றி
ஓம் அரசரே                       போற்றி
ஓம் அருளைத் தரும் ஆனந்தா      போற்றி
ஓம் அருள் கடலே                 போற்றி
ஓம் அருள்தரும் அப்பரே           போற்றி
ஓம் அருமருந்தே                   போற்றி
ஓம் அரும்கலை தழைக்கச் செய்வோரேபோற்றி
ஓம் அருள் செய்யும் வித்தகரே      போற்றி
ஓம் அருட்செல்வரே               போற்றி
ஓம் அருளும் அப்பரே             போற்றி               60
ஓம் அருள் கொடுக்கும் அருளாளரே        போற்றி
ஓம் அருள் தரும் அப்பரே                போற்றி
ஓம் அருளை நல்கச் செய்பவரே            போற்றி
ஓம் அலகில்லா ஞான அருட்கடலே         போற்றி
ஓம் ஆலயக் காவலரே                    போற்றி
ஓம் அலைகடல்சூழ் உலகமே               போற்றி
ஓம் அவதாரம் செய்பவரே                 போற்றி
ஓம் அவி உணவை விரும்புபவரே           போற்றி
ஓம் அவிர்பாகம் ஏற்பவரே                 போற்றி
ஓம் அழகிய வடிவானவரே                 போற்றி        70
ஓம் அழியாச் செல்வமே                 போற்றி
ஓம் அழகிய நம்பியே                   போற்றி
ஓம் அழகின் அழகே                   போற்றி
ஓம் அழகின் கடலே                    போற்றி
ஓம் அழிக்க முடியாதவரே               போற்றி
ஓம் அழிவிலா ஆனந்தமே              போற்றி
ஓம் அழைத்தால் வருபவரே             போற்றி
ஓம் அழியாப்புகழ் பெற்றவரே           போற்றி
ஓம் அழிவற்ற தீர்க்கமானவரே           போற்றி
ஓம் அளவிட முடியாதவரே             போற்றி         80
ஓம் அளவில்லா செல்வம் தருபவரே      போற்றி
ஓம் அளவில் பெருமையுடையவரே       போற்றி
ஓம் அறக்கடலே                       போற்றி
ஓம் அறக்கடவுளே                    போற்றி
ஓம் அறங்காவலரே                   போற்றி
ஓம் அறவிந்தத்தில் வாழ்பவரே         போற்றி
ஓம் அறிவின் வடிவே                 போற்றி
ஓம் அறிவே                         போற்றி
ஓம் அறியாப் பொருள் கொடுப்பவரே   போற்றி
ஓம் அறியாமை இருள் போக்குபவரே   போற்றி           90
ஓம் அறிவாகிய தெய்வமே                 போற்றி
ஓம் அறுபத்துநான்காய் நின்றவரே           போற்றி
ஓம் அற்புத உருவே                      போற்றி
ஓம் அன்பரசு வாழ்வே                    போற்றி
ஓம் அன்பரே                            போற்றி
ஓம் அன்பருக்கு அன்பரே                 போற்றி
ஓம் அன்பாகி நின்றவரே                  போற்றி
ஓம் அன்பின் ஊற்றே                    போற்றி
ஓம் அன்பின் வளர்ச்சியே                 போற்றி
ஓம் அன்போடு ஆதரிப்பவரே              போற்றி          100
ஓம் அனுமனுக்குத் தலைவரே              போற்றி
ஓம் அனைத்தின் சிகரமே                 போற்றி
ஓம் அனைத்திற்கும் மூத்தவரே             போற்றி
ஓம் அனைத்து லோகத்திற்கும் அன்பரே     போற்றி
ஓம் அனைத்துலகமும் ஈன்றவரே           போற்றி
ஓம் அனைத்து உயிர்க்கும் காரணியே       போற்றி
ஓம் அனைத்தும் புரிந்தவரே               போற்றி
ஓம் அனைத்தும் தெரிந்தவரே              போற்றி
ஓம் அனைத்தும் உணர்ந்தவரே             போற்றி
ஓம் அனைவருக்கும் அருள்பவரே        போற்றி        110
ஓம் அஷ்டபைரவரே                   போற்றி
ஓம் அஷ்டலட்சுமியின் தத்துவமே        போற்றி
ஓம் ஆகமத்தேவன் வளர்த்தோரே        போற்றி
ஓம் ஆகாயமாய் இருப்பவரே            போற்றி
ஓம் ஆகாய மண்டலமே                போற்றி
ஓம் ஆகாய வண்ணரே                 போற்றி
ஓம் ஆக்கித் தரும் ஆற்றலே            போற்றி
ஓம் ஆங்காங்கே சிவமாகி நின்றவரே     போற்றி
ஓம் ஆங்காரம் ஆனவரே              போற்றி
ஓம் ஆசைகள் அற்றவரே              போற்றி         120
ஓம் ஆசையற்ற பரம்பொருளே போற்றி
ஓம் ஆசையை அழிப்பவரே போற்றி
ஓம் ஆடம்பரம் அற்றவரே போற்றி
ஓம் ஆதார ரூபமே போற்றி
ஓம் ஆதரவு செய்யும் கடவுளே போற்றி
ஓம் ஆதி கர்த்தாவே போற்றி
ஓம் ஆதிக்கு இறைவனே போற்றி
ஓம் ஆதி சங்கரா போற்றி
ஓம் ஆதி சிவனே போற்றி
ஓம் ஆதி சதாசிவமே போற்றி             130
ஓம் ஆதி நாதனே போற்றி
ஓம் ஆதி போற்றிய அறிவே போற்றி
ஓம் ஆதியானவரே போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனவரே போற்றி
ஓம் ஆத்ம நாதரே போற்றி
ஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி
ஓம் ஆத்மாவில் உள்ளவரே போற்றி
ஓம் ஆம்பல் மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஆராதிப்பவரே போற்றி
ஓம் ஆலயத்தின் காவலரே போற்றி          140
ஓம் ஆலை நிழலில் அமர்ந்தோரே போற்றி
ஓம் ஆவிநாயகரே போற்றி
ஓம் ஆவினில் ஐந்தும் அமர்ந்தவரே போற்றி
ஓம் அழகிய மலர் அணிந்தவரே போற்றி
ஓம் அழியாப் புகழே போற்றி
ஓம் ஆறு குணங்கள் கொண்டவரே போற்றி
ஓம் ஆனந்தக் கூத்தாடுபவரே போற்றி
ஓம் ஆனந்தம் தருபவரே போற்றி
ஓம் ஆனந்த பைரவரே போற்றி
ஓம் ஆட்சி செய்யும் பைரவரே போற்றி         150
            
ஓம் ஆனந்த வீடாளுபவரே                   போற்றி
ஓம் ஆனந்த வெள்ளமே                    போற்றி
ஓம் இகபோகம் கொடுப்பவரே               போற்றி
ஓம் இசையில் மகிழ்வோரே                 போற்றி
ஓம் இச்சை அற்றவரே                     போற்றி
ஓம் இந்திரனால் வணங்கப்பட்டவரே         போற்றி
ஓம் இந்திரனுக்கு அரசரே                  போற்றி
ஓம் இமைப்பொழுதும் காப்பவரே           போற்றி
ஓம் இயற்கை எழில் கூடியவரே            போற்றி
ஓம் இயற்கையோடு இணைந்தவரே          போற்றி     160 
ஓம் இரவில் காப்பவரே போற்றி
ஓம் இரத்தினங்ஙனம் அணிந்தவரே போற்றி
ஓம் இரத்தினங்களின் இருப்பிடமே போற்றி
ஓம் இரத்தின சிம்மாசனத்தில் இருப்பவரே போற்றி
ஓம் இரத்தினங்களின் மகுடபதியே போற்றி
ஓம் இரட்சித்து அருள்பவரே போற்றி
ஓம் இராஜாதி இராஜனே போற்றி
ஓம் இராஜ  யோகம் கொடுப்பவரே போற்றி
ஓம் இருள்கெட அருளும் இறைவரே போற்றி
ஓம் இருள் அகற்றும் வயிரவரே போற்றி         170
ஓம் இலக்குமியைக் காப்பாற்றியவரே போற்றி
ஓம் இளம்பிறையைச் சூடியவரே போற்றி
ஓம் இளமையானவரே போற்றி
ஓம் இனிப்பினை அருள்பவரே போற்றி
ஓம் இனிப்பிற்கு இனிமையே போற்றி
ஓம் இனிமையின் உருவே போற்றி
ஓம் இனிய தேவரே போற்றி
ஓம் இனிய முகத்தவரே போற்றி
ஓம் இனிய மொழியோரே போற்றி
ஓம் இனிய பேச்சுடையவரே போற்றி           180
ஓம் இன்பவைப்பே போற்றி
ஓம் ஈசா போற்றி இறைவனே போற்றி போற்றி
ஓம் ஈடும் எடுப்பும் இலா இறைவரே போற்றி
ஓம் ஈரேழு புவனமும் அழித்தவரே போற்றி
ஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி
ஓம் உக்கிர சொரூபியே போற்றி
ஓம் உடலை புனிதமாக்குபவரே போற்றி
ஓம் உடுக்கை உடையவரே போற்றி
ஓம் உடுக்கையோடு இருப்பவரே போற்றி
ஓம் உண்டென்றவர்க்கு உதவுபவரே போற்றி        190
ஓம் உண்மையிற் செம்பொருளே போற்றி
ஓம் உபாசனை கொடுப்பவரே போற்றி
ஓம் உயர்வுகள் தருபவரே போற்றி
ஓம் உய வலிமை உடையவரே போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உயிர்களைப் படைத்தோரே போற்றி
ஓம் உயிர்காக்கும் தலைவரே போற்றி
ஓம் உலகாண்ட மூர்த்தியே போற்றி
ஓம் உயிர் துணைவனே போற்றி
ஓம் உய்யவந்தவரே போற்றி              200
 ஓம் உலகமும் ஆனவரே போற்றி
ஓம் உலகம் இன்புறத் தோன்றியவரே போற்றி
ஓம் உலகத்து உத்தமரே போற்றி
ஓம் உலக குருவே போற்றி
ஓம் உலகத் தலைவரே போற்றி
ஓம் உலக நோயைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் உலக நாதரே போற்றி
ஓம் உலக நாயகரே போற்றி
ஓம் உலகத்தின் மழையே போற்றி
ஓம்   உலகம் பிறக்கும் விதியே போற்றி              210
ஓம் உலக விதி படைத்தவரே போற்றி
ஓம் உலகப் பேரொளியே போற்றி
ஓம் உலகின் விளைவே போற்றி
ஓம் உலகளிக்கும் ஒருவரே போற்றி                                 ஓம் உலகளிக்கும் செல்வரே போற்றி
ஓம் உலகைக் காப்பவரே போற்றி
ஒம் உவமை இல்லாதவரே போற்றி
ஓம் உள்ளத்து வித்தே போற்றி
ஓம் உள்ளம் புகுந்தோரே போற்றி
ஓம் உன்னமுது ஈன்ற பெருமானே போற்றி           220
ஓம் உன்னத தெய்வமே போற்றி
ஓம் உன்னத விளக்கே போற்றி
ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
ஓம் ஊரிலானே போற்றி
ஓம் ஊர் பாதுகாவலரே போற்றி
ஓம் ஊற்றாகி உள்ளவரே போற்றி
ஓம் ஊனத்து நோயறுப்பவரே போற்றி
ஓம் ஊனத்தை நீக்குபவரே போற்றி
ஓம் எங்களின் கதியே போற்றி
ஓம் எங்களைக் காப்பவரே போற்றி         230
ஓம் எங்களின் துணைவா போற்றி
ஓம் எங்களின் பரம்பரையே போற்றி
ஓம் எங்கும் எதிலும் இருப்பவரே போற்றி                           ஓம் எங்கும் எதிலும் இயங்குபவரே போற்றி
ஓம் எங்கும் இயங்குபவரே போற்றி
ஓம் எங்கும் உள்ளவரே போற்றி
ஓம் எங்கும் ஒளிருபவரே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
ஓம் எங்கும் நிறைந்திருப்பவரே போற்றி
ஓம் எங்கும் பரந்தவரே போற்றி          240
ஓம் எங்கும் கலந்த பரிபூரணரே போற்றி
ஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி
ஓம் எங்களின் நினைவே போற்றி
ஓம் எங்கள் நாதரே போற்றி
ஓம் எண்வகை விசைக்கு அதிபதியே போற்றி                       ஓம் எண்ணும் எழுத்தும் ஆனவரே போற்றி                         ஓம் எண்வகை சித்தி உடையவரே போற்றி                          ஓம் எண்வகைச் செல்வம் கொண்டவரே போற்றி
ஓம் எட்டுத்திக்கின் அதிபதியே போற்றி
ஓம் எண்ணற்ற வரங்கள் தருபவரே போற்றி      250
ஒம் எண்ணிலடங்கா உருவமே போற்றி
ஓம் எண்வகை யோகம் கொடுப்பவரே போற்றி
ஓம் எதிரிகளை வெல்பவரே போற்றி
ஓம் எதிரிகளின் எதிரியே போற்றி
ஓம் எதிலும் உள்ளவரே போற்றி
ஓம் எப்பொழுதும் துணை நிற்பவரே போற்றி
ஓம் எமபாகனை அகற்றியவரே போற்றி
ஓம் எரிசுடராய் நின்றவரே போற்றி
ஓம் எல்லாம் ஆனவரே போற்றி
ஓம் எல்லாம் அறிந்தவரே போற்றி               260
ஓம் எல்லாச் சீருமுடையவரே போற்றி
ஓம் எல்லைத் தேவனே போற்றி
ஓம் எல்லாம் செயவல்லவனே போற்றி
ஓம் எல்லா உரு உள்ளும் இருப்பவரே போற்றி
ஓம் எல்லாம் நிறைந்தவரே போற்றி
ஓம் எளியோரைக் காப்பவரே போற்றி
ஓம் எளியோர்க்கு இரங்குபவரே போற்றி
ஓம் என் சிந்தை நீங்காதவரே போற்றி
ஓம் என்றும் ஒளியுடன் இருப்பவரே போற்றி
ஓம் ஏகமாய் இருப்பவரே போற்றி               270
ஓம் ஏகம்பமேவியிருந்தாய் போற்றி
ஓம் ஐப்பசி பரணி விரும்பியே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஓட்டியாணம் அணிபவரே போற்றி
ஓம் ஓசை ஒளியாய் இருப்பவரே போற்றி
ஓம் ஒளியால் உலகை ஈன்றவரே போற்றி
ஓம் ஓங்காரத்து உட்பொருளே போற்றி
ஓம் ஒம் எனும் மந்திரமே போற்றி
ஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி
ஓம் ஒலியின் ஓசையே போற்றி                280
ஓம் ஒளியின் கடலே போற்றி
ஓம் ஓங்காரம் கொண்டவரே போற்றி
ஓம் ஒளியின் சேர்க்கையே போற்றி
ஓம் ஓதிய மந்திரமே போற்றி
ஓம் ஒளிர்மாமலரே போற்றி
ஓம் ஒப்பிலா மைந்தா போற்றி
ஓம் ஒளியின் வெள்ளமே போற்றி
ஓம் கங்காட வேடரே போற்றி
ஓம் கங்கணமாலை உடையவரே போற்றி
ஓம் கஞ்சுகக் கடவுளே போற்றி                    290
ஓம் கடாட்சம் அளிப்பவரே போற்றி
ஓம் கணங்களின் தலைவரே போற்றி
ஓம் கனற் சூலப்படையோனே போற்றி
ஓம் கண் இமையாக இருப்பவரே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கண்ணப்பர்க்கு அருள் செய்தவரே போற்றி
ஓம் கதியே போற்றி
ஓம் கதி போற்றிய கனியே போற்றி
ஓம் கத்திகைத் தரித்தவரே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி                          300
ஓம் கபாலியே போற்றி
ஓம் கபாலிகளின் பேரின்பமே போற்றி
ஓம் கணங்களை உடையவரே போற்றி
ஓம் கருமத்தை ஒழிப்பவரே போற்றி
ஓம் கர்வத்தை அழிப்பவரே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி
ஓம் கருணை பழுத்தக் கொம்பே போற்றி
ஓம் கருணைப் பார்வையரே போற்றி
ஓம் கருணை வெள்ளமே போற்றி
ஓம் கருமுகிலாகியக் கண்ணே போற்றி                     310
ஓம் கருப்பஞ்சாறே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கர்மபாசத்தை நீக்குபவரே போற்றி
ஓம் கர்வத்தை மாய்ப்பவரே போற்றி
ஓம் கலைகளுக்கு அரசரே போற்றி
ஓம் கலப்பையைக் காப்பவரே போற்றி
ஓம் கலையின் கடலே போற்றி
ஓம் கலை ஓதும் காவலரே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி
ஓம் கலைத் தலைவரே போற்றி                           320
ஓம் கலைத் தெய்வமே போற்றி
ஓம் கலச ரூபனே போற்றி
ஓம் கலைச் செல்வமே போற்றி
ஓம் கலை அம்சம் நிறைந்தவரே போற்றி
ஓம் கல்யாணசுந்தரமே போற்றி
ஓம் கலை மலிந்த சீர் நம்பியே போற்றி
ஓம் கவியே போற்றி
ஓம் கவிச் செல்வனே போற்றி
ஓம் கவிதையின் உருவே போற்றி
ஓம் கள்ளமில்லாதவரே போற்றி                       330
ஓம் கள்ளமில்லா ஒருவரே போற்றி
ஓம் களவைக் குலைப்போனே போற்றி
ஓம் கற்பகமாய் அருள்பவரே போற்றி
ஓம் கற்றவர்க்கோர் கற்பனனே போற்றி
ஓம் கனக்குன்றே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கஸ்தூரித் திலகம் பூண்டவரே போற்றி
ஓம் காலனை அழித்தவரே போற்றி
ஓம் காலங்களில் ஊழியாய் நின்றவரே போற்றி
ஓம் கால எந்திரமே போற்றி                           340
ஓம் காலத்தின் கடவுளே போற்றி
ஓம் காலைக் கதிரே போற்றி
ஓம் காற்றாகி கலந்தவரே போற்றி                                 ஓம் காலகலாநிதியே போற்றி
ஓம் காசியைக் காத்தவரே போற்றி
ஓம் காலனைக் காலால் உதைத்தவரே போற்றி
ஓம் காலத்தைச் செலுத்துபவரே போற்றி
ஓம் காலங்களின் சொரூபமே போற்றி
ஓம் காவல் நாயகரே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி                       350
ஓம் காவலரே போற்றி
ஓம்கார்த்திகை மாதத்தில் பிறந்தவரே போற்றி
ஓம் காமத்தை வென்றவரே போற்றி
ஓம் காமனை வென்றவரே போற்றி
ஓம் காமனையும் கரியாக்கியவரே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காராகி நின்ற முகிலே போற்றி
ஓம் காருண்யக் கடலே போற்றி
ஓம் காவற் கடவுளே போற்றி
ஓம் காவாய் கனகத்திரளே போற்றி                    360
ஓம் கிங்கிங்கிணி மாலைப் பிரியரே போற்றி
ஓம் கிராம பாலகரே போற்றி
ஓம் கிருபைக்  கடலே போற்றி
ஓம் குங்கும மேனியனே போற்றி
ஓம் குல தேவா போற்றி
ஓம் குமரனே போற்றி
ஓம் குணக்குன்றே போற்றி
ஓம் குருநாதா போற்றி
ஓம் குணங்களின் குன்றே போற்றி
ஓம் குணங்களின் தலைவா போற்றி                      370
ஓம் குணநலன்களால் உயர்ந்தவரே போற்றி
ஓம் குணமிலானே போற்றி
ஓம் குண்டலினி சக்தியே போற்றி
ஓம் குபேரனின் அதிபதியே போற்றி
ஓம் குலம் விளங்க வைப்பவரே போற்றி
ஓம் குளிர் செம்ப வளமே போற்றி
ஓம் குறுமணியே போற்றி
ஓம் குறைவில்லாதவரே போற்றி
ஓம் குறையாத கல்வியே போற்றி
ஓம் குறைவினையைத் தீர்ப்பவரே போற்றி               380
ஓம் குற்றாலத்து கூத்தா போற்றி
ஓம் கூர்வாள்ப் படையோரே போற்றி
ஓம் கூரிய வேல் உடையோரே போற்றி
ஓம் கூத்தாடும் பசுபதியே போற்றி
ஓம் கெட்டன அழிப்பவரே போற்றி
ஓம் கேத்திர பாலரே போற்றி
ஓம் கொடை மிகுந்தவரே போற்றி
ஓம் கொடுஞ்சூலக் கையரே போற்றி
ஓம் கொற்றக் கொடையோரே போற்றி
ஓம் கொன்றைப்பூ விரும்பியே போற்றி               390
ஓம் கோபத்தின் பொருளே போற்றி
ஓம் கோரியது கொடுப்பவரே போற்றி
ஓம் கோள்களின் தலைவா போற்றி
ஓம் கொடைகளின் கோவே போற்றி
ஓம் கைதரவல்லக் கடவுளே போற்றி
ஓம் கைமாலை அணிந்தவரே போற்றி
ஓம் சகத்துக்கு இறைவரே போற்றி
ஓம் சகல கலை மணாளரே போற்றி                                ஓம் சகலசத்ருநாசனாரே போற்றி
ஓம் சகலமும் அருள்பவரே போற்றி                  400
ஓம் சகிப்புத்தன்மை கொண்டவரே போற்றி
ஓம் சக்தி கொண்டவரே போற்றி
ஓம் சக்தியின் துணைவரே போற்றி
ஓம் சக்தியின் சொரூபமே போற்றி
ஓம் சக்தி படைத்தவரே போற்றி
ஓம் சகல செல்வமும் கொடுப்பவரே போற்றி
ஓம் சக்தியோடு அருள்புரிபவரே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தவரே போற்றி
ஓம் சத்திய சொரூபமே போற்றி
ஓம் சத்தியப் பரம்பொருளே போற்றி               410
ஓம் சமுத்திரத்தின் தலைவரே போற்றி
ஓம் சபாநாயகரே போற்றி
ஓம் சர்வகாலமும் இருப்பவரே போற்றி
ஓம் சராசரம் காப்பவரே போற்றி                                  ஓம் சராசரக்கூட்டத்தின் தலைவரே போற்றி
ஓம் சர்வ சமத்தரே போற்றி
ஓம் சாந்த சொரூபியே போற்றி
ஓம் சாப விமோட்சனம் கொடுப்பவரே போற்றி
ஓம் சாம தேவியே போற்றி
ஓம் சாவுக்களை காப்பவரே போற்றி                   420
ஓம் சிதம்பர சொர்ண பைரவரே போற்றி
ஓம் சித்திமணி மார்பனே போற்றி
ஓம் சித்தர்களால் போற்றப்படுபவரே போற்றி                       ஓம் சித்தரில் உள்ளவரே போற்றி
ஓம் சித்தன் விரும்பும் சிவனாரே போற்றி
ஓம் சித்தி பெற்ற யோகநிலையே போற்றி
ஓம் சித்திரை பரணியை விரும்பியே போற்றி
ஓம் சித்தாந்த வல்லபனே போற்றி
ஓம் சித்தர் குலத்தின் தலைவரே போற்றி
ஓம் சித்தனுக்கும் சித்தரே போற்றி                    430
ஓம் சித்தியளிக்கும் சித்தனே போற்றி
ஓம் சித்தத்தின் சித்தனே  போற்றி
ஓம் சிந்தாமணியே போற்றி
ஓம் சிந்தூரத் திலகம் இடுபவனே போற்றி
ஓம் சிந்தையாக இருப்பவரே போற்றி
ஓம் சிந்தைக்கும் உகந்தவரே போற்றி                               ஓம் சிந்தையிலிருந்தவரே போற்றி
ஓம் சிந்து நதித் தலைவரே போற்றி
ஓம் சிம்ம வாகனரே போற்றி
ஓம் சிரம் கொய்தவரே போற்றி                 440
ஓம் சிரிப்பை விரும்புபவரே போற்றி
ஓம் சிலம்பொலிக்கும் திருவடிகளே போற்றி
ஓம் சிவலோக அதிபதியே போற்றி
ஓம் சிவ அம்சமே போற்றி
ஓம் சிவந்த சடை உடையோரே போற்றி
ஓம் சிவசக்தியே போற்றி
ஓம் சிவானந்தனாய் நிற்பவரே போற்றி
ஓம் சிவப்பிழம்பே போற்றி
ஓம் சிவஞான பைரவரே போற்றி
ஓம் சிவவாக்கியத்தால் மகிழ்பவரே போற்றி        450
ஓம் சிவத்தின் மறு சொரூபமே போற்றி
ஓம் சிவத்தின் சொரூபமே போற்றி
ஓம் சிவனின் சேவடியே போற்றி
ஓம் சிவப்பு மாலை விரும்பியே போற்றி
ஓம் சிவத்தில் தோன்றியவரே போற்றி
ஓம் சீர்புகழ் பைரவரே போற்றி                                     ஓம் சீறும் சிவனே போற்றி
ஓம் சீலம் உடையவரே போற்றி
ஓம் சுகத்தின் சுகமே போற்றி
ஓம் சுகத்தின் திருவுருவே போற்றி                   460
ஓம் சுகப்பிரம்மமே போற்றி
ஓம் சுடர் ஒளியாக நின்றவரே போற்றி
ஓம் சுடர்மணியே போற்றி
ஓம் சுடர்விளக்கே போற்றி
ஓம் சுத்தசுக உருவே போற்றி
ஓம் சுந்தர வதனமே போற்றி
ஓம் சுயம்பு ஆனவரே போற்றி
ஓம் சுவைபடச் சொல்பவரே போற்றி                               ஓம் சுழிமுனை நின்றவரே போற்றி
ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி                 470
ஓம் சூரனாய் இருப்பவரே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவரே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூரிய ஒளியே போற்றி
ஓம் சூரர்களின் தலைவரே போற்றி
ஓம் சூதுகளை வென்றவரே போற்றி
ஓம் செஞ்சொல்லின் கிழவரே போற்றி
ஓம் செஞ்சுடரே போற்றி
ஓம் செஞ்சடையோனே போற்றி
ஓம் செஞ்சொல் திருவே போற்றி             480
ஓம் செந்தாமரைக் கண்ணனே போற்றி
ஓம் செந்தொடை கோமானே போற்றி
ஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி
ஓம் செம்பொன் மேனியனே போற்றி                                ஓம் செறிவுடைய செம்பொருளே போற்றி
ஓம் செல்வமே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செல்வத்தின் செல்வனே போற்றி
ஓம் செல்வம் அளிப்பவரே போற்றி
ஓம் செல்வம் ஈந்தருளும் ஈசரே போற்றி         490
ஓம் செல்வம் உடையாய் போற்றி
ஓம் செல்வ ஒளியோனே போற்றி
ஓம் செல்லாத செல்வமே போற்றி
ஓம் செல்வம் தருபவரே போற்றி
ஓம் செல்வத் திருமகனே போற்றி
ஓம் செல்வ நாயகரே போற்றி
ஓம் செல்வத்தின் நிதியே போற்றி
ஓம் செல்வம் நல்க வல்லோனே போற்றி                            ஓம் செல்வப் பிரியனே போற்றி
ஓம் செல்வப் பெருக்கே போற்றி                   500
ஓம் செல்வப் பரம் பொருளே போற்றி
ஓம் செல்வ ராசரே போற்றி
ஓம் செவ்வாய செல்வம் தருபவரே போற்றி
ஓம் சேய்பிழைகள் பொறுப்பவனே போற்றி
ஓம் சொர்ணத்தால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி
ஓம் சொர்ண ஆடை அணிந்தவரே போற்றி
ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி
ஓம் சொர்ண மயமானவனே போற்றி
ஓம் சொற்பொருளாய் நிற்பவரே போற்றி
ஓம் சொற்களின் தலைவரே போற்றி                510
ஓம் சோதி போல் எழுந்தவரே போற்றி
ஓம் சோதி மலரோனே போற்றி
ஓம் சைவத்தை விரும்புபவரே போற்றி
ஓம் சைவச் செங்கொடியே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞானத்து இறைவனே போற்றி
ஓம் ஞானக்கடலே போற்றி
ஓம் ஞான வழி காட்டுபவரே போற்றி
ஓம் ஞான மார்க்கம் கொடுப்பவரே போற்றி
ஓம் ஞானக் கொழுந்தே போற்றி                    520
ஓம் ஞானக் கொடியே போற்றி
ஓம் ஞான மயமே போற்றி
ஓம் ஞான முத்தமிழே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் ஞானம் தரும் இறைவரே போற்றி
ஓம் ஞானப் பெருங்கடலே போற்றி
ஓம் ஞான பைரவரே போற்றி
ஓம் ஞாழி யூர்தியே போற்றி
ஓம் ஞான வடிவமே போற்றி
ஓம் ஞான விளக்கே போற்றி                    530
ஓம் தக்கன தருபவரே போற்றி
ஓம் தங்க காணிக்கை ஏற்பவரே போற்றி
ஓம் தங்க மயமானவரே போற்றி
ஓம் தங்க மேனியரே போற்றி
ஓம் தங்கத்தை வாரி வழங்குபவரே போற்றி
ஓம் தத்துவனே போற்றி
ஓம் தத்துவத் தலைவரே போற்றி
ஓம் தந்தைக்கும் தந்தையே போற்றி
ஓம் தமிழின் அழகே போற்றி
ஓம் தமிழோடு பிறந்தவரே போற்றி                540
ஓம் தமிழ் மதுரைக்கரசரே போற்றி
ஓம் தருமத்தின் உருவே போற்றி
ஓம் தர்மமே போற்றி
ஓம் தர்மத்தின் தர்மவாரே போற்றி
ஓம் தர்மத்தைக் காப்பவரே போற்றி
ஓம் தர்மத்தின் தலைவரே போற்றி
ஓம் தலத்தின் நாயகரே போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் தவங்களின் தவ வலிமையே போற்றி
ஓம் தவநெறிகள் தருபவரே போற்றி                  550
ஓம் தவத் தெய்வமே போற்றி
ஓம் தவநெறிப் பிரியரே போற்றி
ஓம் தற்காப்பு கொடுப்பவரே போற்றி
ஓம் தனம் தரும் தனக்கொடியே  போற்றி
ஓம் தனநாதா போற்றி
ஓம் தனம் தருபவரே போற்றி
ஓம் தனிப்பெருங் கருணையே போற்றி
ஓம் தனம் தரும் அச்சைய பாத்திரமே போற்றி
ஓம் தாமரை கை கொண்டவரே போற்றி
ஓம் தாமரைத் தடாகமே போற்றி                    560
ஓம் தாமரை போன்றவரே போற்றி
ஓம் தாம்பூலப் பிரியரே போற்றி
ஓம் தாயானவனே போற்றி
ஓம் தாயிற் தயைவுடையவரே போற்றி                              ஓம் தாயுள்ளம் கொண்டவரே போற்றி
ஓம் தாண்டவம் ஆடுபவரே போற்றி
ஓம் தானத்தின் உயர்வே போற்றி
ஓம் திக்குபாலகர்களின் ஈஸ்வரரே போற்றி
ஓம் திங்கள் முடியுடையாய் போற்றி
ஓம் திசைகளில் உள்ளவரே போற்றி                570
ஓம் திடமானவரே போற்றி
ஓம் திரிலோகத்திற்கும் தலைவரே போற்றி
ஓம் திட்டி தோஷத்தை ஒழிப்பவரே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டவரே போற்றி
ஓம் திருநீற்று அழகரே போற்றி
ஓம் திரு நீற்று அழகுடையோரே போற்றி
ஓம் திருநின்ற செம்மையே போற்றி                                ஓம் திருச்செல்வமே போற்றி
ஓம் திருப்புகழே போற்றி
ஓம் திருவிளையாடல் புரிந்தவரே போற்றி            580
ஓம் திருவருள் தருபவரே போற்றி
ஓம் திலகமெனத் திகழ்பவரே போற்றி
ஓம் தில்லைச் சிற்றம்பலத்தில் வாழ்பவரே போற்றி
ஓம் திறமைசாலியே போற்றி
ஓம் தினகரனே போற்றி
ஓம் திண்ணிய நெஞ்சம் கொடுப்பவரே போற்றி
ஓம் தீதாந்த தெய்வமே போற்றி
ஓம் தியவைகளுக்குத் தீயே போற்றி
ஓம் தீரம் உடையவரே போற்றி
ஓம் தீர்க்காயுள் தரும் தினபந்துவே போற்றி             590
ஓம் தீவினை அழிப்பவரே போற்றி
ஓம் தீரத்தலைவா போற்றி
ஓம் தீராத பிணிகள் தீர்ப்பவரே போற்றி
ஓம் தீர்க்கமானவரே போற்றி
ஓம் தைரியம் கொடுப்பவரே போற்றி
ஓம் தீவினைகள் அணுகாமல் அருள்பவரே போற்றி
ஓம் தீவிர உபாசனைப் பிரியரே போற்றி
ஓம் துன்பங்கள் ஒழிப்பவரே போற்றி
ஓம் துன்பத்துக்கே தீராத துன்பமளிப்பவரே போற்றி
ஓம் துன்பம் தொலைப்பவரே போற்றி                  600
ஓம் தூயான் இதய சுகந்தமே போற்றி
ஓம் தூய மனத்தைக் கொடுப்பவரே போற்றி
ஓம் தூய திருமணிச் செல்வரே போற்றி
ஓம் தூய பிரம்மரே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி
ஓம் தெளிந்தோர் பேரின்பமே போற்றி
ஓம் தெளிந்த நல்லறிவு கொடுப்பவரே போற்றி
ஓம் தென்னவன் செல்வமே போற்றி                                 ஓம் தென் தில்லையில் உறைபவரே போற்றி
ஓம் தென்னாடு உடையவரே போற்றி                   610
ஓம் தேவர்களைக்  காப்பவரே போற்றி
ஓம் தேவர்களின் சுடரே போற்றி
ஓம் தேவர்கள் தலைவரே போற்றி
ஓம் தேவரறியாத தேவரே போற்றி
ஓம் தேவ தேவரே போற்றி
ஓம் தேவாதி தேவரே போற்றி
ஓம் தேவேந்திரனின் தேவரே போற்றி                              ஓம் தேவர்களின் தேவரே போற்றி
ஓம் தேவர் தொழ வருபவரே போற்றி
ஓம் தேவர்களின் வாழ்வே போற்றி                    620
ஓம் தேவ முதல்வரே போற்றி
ஓம் தேவராசரே போற்றி
ஓம் தேவர்கள் வணங்கும் நாதரே போற்றி
ஓம் தொண்டர் பரவுமிடத்தாய் போற்றி                             ஓம் தொன்மையுடையோரே போற்றி
ஓம் தோழனாக இருப்பவரே போற்றி
ஓம் தோழமை போற்றிய துணைவா போற்றி
ஓம் தோசமற்றவரே போற்றி
ஓம் தேசனடி போற்றி
ஓம் தேனூறு செந்தாமரையே போற்றி                 630
ஓம் தையின் முதல் செவ்வாய் விரும்பியே போற்றி
ஓம் நஞ்சண்டோரே போற்றி
ஓம் நஞ்சுண்டவரே போற்றி
ஓம் நடராசரே போற்றி
ஓம் நடுவான தேவரே போற்றி
ஓம் நந்திப்பிரியரே போற்றி
ஓம் நமக்கருள் தருபவரே போற்றி
ஓம் நமச்சிவாயப் பொருளே போற்றி                               ஓம் நம்பினோர்க்கு நலம் அளிப்பவரே போற்றி
ஓம் நம் அருகில் இருப்பவரே போற்றி                640
ஓம் நல் உரைகள் நல்குவோரே போற்றி
ஓம் நரகர்களின் இறைவரே போற்றி
ஓம் நல்லன எண்ணச் செய்வோரே போற்றி
ஓம் நல்லவர்களுக்கு நல்லவரே போற்றி
ஓம் நல்லாரை நன்மையறிவாய் போற்றி
ஓம் நல்லியல்புகளுக்கு நாயகரே போற்றி
ஓம் நல்லவர்களுக்கு நற்பதம் அளிப்பவரே போற்றி
ஓம் நல்வழி காட்டுபவரே போற்றி
ஓம் நவரத்தினக் கடலில் மூழ்கியிருப்பவரே போற்றி     
ஓம் நற்குணம் உடையவரே போற்றி                  650
ஓம் நற்குணம் உடையோரை விரும்புபவரே போற்றி
ஓம் நற்கதி கொடுப்பவரே போற்றி
ஓம் நற்குணம் தருபவரே போற்றி
ஓம் நற்பலன்கள் தரும் நல்லவரே போற்றி
ஓம் நறுமணத்தின் ஆதாரமே போற்றி
ஓம் நறுமணம் வீசுபவரே போற்றி
ஓம் நன்மை செய்வோரே போற்றி
ஓம் நன்பொருள்ச் செல்வமே போற்றி
ஓம் நாக அணி கொண்டவரே போற்றி
ஓம் நாதத்தின் தலைவரே போற்றி                    660
ஓம் நாகங்களைப் படைப்பவரே போற்றி
ஓம் நாகலிங்க மலர் விரும்பியே போற்றி
ஓம் நாக வல்லபரே போற்றி
ஓம் நாடி வந்தோரை வாழ வைப்பவரே போற்றி
ஓம் நாடுவோர்க்கு நலம் தருபவரே போற்றி
ஓம் நாதாந்த ஒளியானவரே போற்றி
ஓம் நாவில் நடு உரையாய் நின்றவரே போற்றி
ஓம் நாவின் சுவையே போற்றி
ஓம் நாகயமான நாதா போற்றி
ஓம் நாகமலையை ஆக்கியவரே போற்றி              670
ஓம் நான்மறைகளும் புகழ்பவரே போற்றி
ஓம் நான்மறை முதல்வனே போற்றி
ஓம் நிமலனடியோய் போற்றி
ஓம் நிர்மாண மூலப்பொருளே போற்றி
ஓம் நிறுத்தா போற்றி
ஓம் நிறை நிலை கொண்டவரே போற்றி
ஓம் நிறை தொழில் புரிபவரே போற்றி
ஓம் நிலையான ஆதாரமே போற்றி
ஓம் நிலையான ஞானமே போற்றி
ஓம் நிலையாக நின்றவரே போற்றி            680
ஓம் நினைத்த உருவில் வருபவரே போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீங்கா இறைவரே போற்றி
ஓம் நீடித்த ஞானமே போற்றி
ஓம் நீண்ட கரங்கள் உடையவரே போற்றி
ஓம் நீதி மார்க்கத்தின் தலைவரே போற்றி
ஓம் நீதி தேவரே போற்றி
ஓம் நீராகிய நிழலே போற்றி
ஓம் நீதியை நிலைநாட்டுபவரே போற்றி
ஓம் நீலகண்டரே போற்றி                        690
ஓம் நீலவாணனே போற்றி
ஓம் நுண்ணிய அணுவே போற்றி
ஓம் நூதனத் தாண்டவப் பிரியரே போற்றி
ஓம் நெஞ்சிருக்கை கொண்டவரே போற்றி
ஓம் நெடுவீதி நடப்பவரே போற்றி
ஓம் நெருப்பு உருவம் ஆனவரே போற்றி
ஓம் நெருப்பு ஏந்தியவரே போற்றி
ஓம் நெய் விளக்கே போற்றி                                       ஓம் நெறி போற்றிய நினைவே போற்றி
ஓம் நெற்றி நெருப்புக் கண்ணனே போற்றி            700
ஓம் நேயருள் அரசே போற்றி
ஓம் நோய்களைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் நோய்களைப் போக்குபவரே போற்றி
ஓம் பகலாகி வானாகி இருப்பவரே போற்றி
ஓம் பக்தனுக்கருள்பவரே போற்றி
ஓம் பக்தர்களைக் காப்பவரே போற்றி
ஓம் பக்கத் துணையானவரே போற்றி
ஓம் பக்திக்குரியோரே போற்றி
ஓம் பக்தர்களின் பக்தரே போற்றி
ஓம் பக்தனை பராமரிப்பவரே போற்றி               710
ஓம் பகைவர்க்குப் பகைவரே போற்றி                                                                              ஓம் பக்தர்களால் போற்றப்படுபவரே போற்றி
ஓம் பஞ்சபூதங்களின் தலைவரே போற்றி
ஓம் பட்டாடை விரும்பியே போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பந்தபாசம் அறுப்பவரே போற்றி
ஓம் பரஞ்சோதியின் அதிபதியே போற்றி
ஓம் பரணிக்கு அதிபதியே போற்றி
ஓம் பராக்கிரமசாலியே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி                      720
ஓம் பரசு ஏந்தியவரே போற்றி
ஓம் பரமாத்மா நிலையைத் தருபவரே போற்றி
ஓம் பரிபூரண நிலையே போற்றி
ஓம் பரம் பொருளே போற்றி
ஓம் பரம்பொருள் எனும் பேரொளியே போற்றி
ஓம் பரமானந்த முக்கண் கொண்டவரே போற்றி
ஓம் பரமானந்தத்தின் பரனே போற்றி
ஓம் பரணியின் நாதரே போற்றி
ஒம் பரிசுத்தமானவரே போற்றி
ஓம் பலகலைக்கும் அரசரே போற்றி              730
ஓம் பலகலைகளும் கற்றவரே போற்றி
ஓம் பலகலையும் தருபவரே போற்றி
ஓம் பலம் தருபவரே போற்றி
ஓம் பலாப்பழப் பிரியரே போற்றி
ஓம் பலமுள்ளவரே போற்றி
ஓம் பல்லூளித் தலைவரே போற்றி
ஓம் பழங்களை ஏற்பவரே போற்றி
ஓம் பழிதீர்க்கும் பாலகரே போற்றி
ஓம் பழமையின் பெருமையே போற்றி
ஓம் பாக்கியங்களைத் தருவோரே போற்றி          740
ஓம் பாசுபதம் கொடுத்தவரே போற்றி
ஓம் பாண்டவர்களுக்கு உதவியவரே போற்றி
ஓம் பாதக் கொலுசு உடையோரே போற்றி
ஓம் பாபநாசம் செய்தவரே போற்றி
ஓம் பாம்பரசரே போற்றி
ஓம் பாம்பை உடையவரே போற்றி
ஓம் பைரவா புவனத்தாரே போற்றி
ஓம் பார்வதியின் பாகரே போற்றி
ஓம் பால் அன்னம் உகந்த பாலகரே போற்றி
ஓம் பால பைரவரே போற்றி                       750
ஓம் பாலின் வெண்மையே போற்றி
ஓம் பாவம் அறுப்பவரே போற்றி
ஓம் பாவ அழுக்கை போக்குகின்றவரே போற்றி
ஓம் பாவக் கூட்டத்தை நீக்குபவரே போற்றி
ஓம் பாவங்களைப் போக்குபவரே போற்றி
ஓம் பிம்ம சொரூபமே போற்றி
ஓம் பிரகாசமானவரே போற்றி
ஓம் பிரம்மச்சரிய விரதம் காப்பவரே போற்றி                        ஓம் பிரம்ம சொரூபமே போற்றி
ஓம் பிரமாண்டத்தின் தலைவரே போற்றி                 760
ஓம் பிரளயகாலத் தலைவரே போற்றி
ஓம் பிராணநாதரே போற்றி
ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் பிழைகளைப் பொறுப்பவரே போற்றி
ஓம் பிள்ளை குணம் கொண்டவரே போற்றி
ஓம் பிறப்பை அழிப்பவரே போற்றி
ஓம் பிறப்பு இறப்பு அற்றவரே போற்றி
ஓம் பிறப்பிலியாய் நின்றவரே போற்றி
ஓம் பிறவியைப் போக்குபவரே போற்றி
ஓம் புகழ் உடையாரே போற்றி                       770
ஓம் புகழ் ஓங்கியவரே போற்றி
ஓம் புண்ணிய உலகின் அதிபதியே போற்றி
ஓம் புண்ணியத்தைக் கொடுப்பவரே போற்றி
ஓம் புண்ணியத்தைச் செய்பவரே போற்றி
ஓம் புண்ணியம் தருபவரே போற்றி
ஓம் புண்ணிய நதி தீரரே போற்றி
ஓம் புது வாழ்வு அருள்பவரே போற்றி
ஓம் புதுவாழ்வுக்குத் தலைவரே போற்றி
ஓம் புத்தியே அறிவே போற்றி
ஓம் புத்தொளி கொடுப்பவரே போற்றி                780
ஓம் புராணம் போற்றும் புண்ணியரே போற்றி
ஓம் புலன்களை வென்றவரே போற்றி
ஒம் புவனங்களின் பிரபுவே போற்றி
ஓம் புவனங்களின் பிராணனே போற்றி
ஓம் புவனத்தின் புருசரே போற்றி
ஓம் புனித மொழிப் பொருளே போற்றி
ஓம் புணர்ச்சிப் பொருளாகி நின்றவரே போற்றி
ஓம் புன்சிரிப்பு உடையோரே போற்றி                              ஓம் பூசனையின் பெருமையே போற்றி
ஓம் பூதக் கூட்டத் தலைவரே போற்றி               790
ஓம் பூதக் கூட்டப்படைகள் உள்ளவரே போற்றி
ஓம் பூதங்களுக்கும் அருள்பவரே போற்றி
ஓம் பூ மலரான் ஏத்தும் புனிதரே போற்றி
ஓம் பூமாதேவியால் துதிக்கப்பட்டவரே போற்றி
ஓம் பூமிக்கரசே போற்றி
ஓம் பூமியின் அதிபதியே போற்றி
ஓம் பூமியைக் காப்பவரே போற்றி
ஓம் பூமியைத் தாங்குபவரே போற்றி
ஓம் பூமிநாத பூபாளமே போற்றி
ஓம் பேராகி எங்கும் பரந்தவனே போற்றி                 800
ஓம் பேரின்ப நற்கதியே போற்றி
ஓம் பேரிலானே போற்றி
ஓம் பேரின்பத்தில் திளைப்போரே போற்றி
ஓம் பேரருள்கள் செய்தவரே போற்றி
ஓம் பேரறிஞனே போற்றி
ஓம் பேரும் பெரும் படையும் கொடுப்பவரே போற்றி
ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
ஓம் பொன்னை அளிப்பவரே போற்றி
ஓம் பொறுமைக்கு அன்பரே போற்றி
ஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி                  810
ஓம் பொங்கு கடலே போற்றி
ஓம் பொன்னலங்காரப் பிரியரே போற்றி
ஓம் பொருளின் செல்வரே போற்றி
ஓம் பொருட் செல்வரே போற்றி
ஓம் பொன்னம்பல சொர்ண பைரவரே போற்றி
ஓம் பொருள் தரும் பொன்னே போற்றி
ஓம் பொருள் வளம் தருவோரே போற்றி
ஓம் பொன்மலையோரே போற்றி
ஓம் பொன்மாலை மார்பினரே போற்றி
ஓம் பொறுமையின் வடிவே போற்றி                      820
ஓம் பொன்னப்பனுடையனம்மையே போற்றி
ஓம் பொன்னியலும் மேனியரே போற்றி
ஓம் பொன்பட்டு விரும்பியே போற்றி
ஓம் பொல்லா வினைகள் அறுப்பவரே போற்றி
ஓம் போகபோகியே போற்றி
ஓம் போரில் சிறந்தவரே போற்றி
ஓம் போற்றும் மருந்தே போற்றி
ஓம் பெரியார்க்கும் பெரியோரே போற்றி
ஓம் பெரிய நாயகனே போற்றி
ஓம் பெருவாழ்வு அளிப்பவரே போற்றி                 830
ஓம் பெருட் கருணையே போற்றி
ஓம் பெருஞ்செல்வரே போற்றி
ஓம் பெரும் திருவருளே போற்றி
ஓம் பைரவியின் துணையே போற்றி
ஓம் பெரும் தேவலே போற்றி
ஓம் பெண்ணொருபாகரே போற்றி
ஓம் பைரவ ஈசனே போற்றி
ஓம் மகா ஆனந்தமே போற்றி
ஓம் மகா பைரவரே போற்றி
ஓம் மகா மாயை ஆனவரே போற்றி                  840
ஓம் மகத்தான ஜோதியே போற்றி
ஓம் மகா ஞானியே போற்றி
ஓம் மக்களின் தலைவரே போற்றி
ஓம் மக்கள் நோய் தீர்ப்பவரே போற்றி                             ஓம் மக்களின் மருந்தே போற்றி
ஓம் மகத்தான மகா சக்தியே போற்றி
ஓம் மகா மந்திரமூர்த்தியே போற்றி
ஓம் மகா தேவரே போற்றி
ஓம்  மகேஸ்வரரே போற்றி
ஓம் மகா யோக நிலையே போற்றி                    850
ஓம் மகரகுண்டலமே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மங்கள நாயகரே போற்றி
ஓம் மங்கள மானவரே போற்றி                                    ஓம் மங்களமூர்த்தியே போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் மண்டலத்தோர் புகழ நின்றவரே போற்றி
ஓம் மண்ணின் நாயகரே போற்றி
ஓம் மணி மண்டலமே போற்றி
ஓம் மந்திர சக்தியே போற்றி                        860
ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
ஓம் மருளான உன்மத்தனானாய் போற்றி
ஓம் மருவிய கருணையே போற்றி
ஓம் மருத்துவ தேவரே போற்றி
ஓம் மலர்விசையில் இருப்பவரே போற்றி
ஓம் மலர்களின் மனமே போற்றி
ஓம் மலைவாசகரே போற்றி
ஓம் மல்லர்களின் முதல்வரே போற்றி
ஓம் மழை போல் சுகங்கள் தருபவரே போற்றி
ஓம் மற்றொரு சிவனே போற்றி                    870
ஓம் மறுசுடரின் மாணிக்கமே போற்றி
ஓம் மறையோர் கோவே போற்றி
ஓம் மன்னனே போற்றி
ஓம் மன்னிக்கும் மாண்பு கொண்டவரே போற்றி
ஓம் மன்னிக்கும் குணமுடையவரே போற்றி
ஓம் மனுவே போற்றி
ஓம் மனக்கலக்கம் தீர்ப்பவரே போற்றி
ஓம் மனதினை ஒருமைப்படுத்துபவரே போற்றி
ஓம் மனதில் நிற்கும் மாயாவியே போற்றி
ஓம் மன இருளைப் போக்குபவரே போற்றி           880
ஓம் மனத்துக்கரசே போற்றி
ஓம் மனத்தை வென்றவரே போற்றி
ஓம் மனிதருள் மாணிக்கமே போற்றி
ஓம் மனோபலம் தருபவரே போற்றி
ஓம் மாணிக்க ஒளியே போற்றி
ஓம் மாணிக்க வெயில் போல் தோன்றுபவரே போற்றி
ஓம் மாபெரும் மந்திர சக்தியே போற்றி                             ஓம் மாம்பழப்பிரியரே போற்றி
ஓம் மாமணியே போற்றி
ஓம் மாயா உலக வாசியே போற்றி              890
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் மாவீரரே போற்றி
ஓம் மாற்றமில்லாதவரே போற்றி
ஓம் மான் ஏந்தியவரே போற்றி
ஓம் முக்தா  போற்றி
ஓம் முக்தனே  போற்றி
ஓம் முக்தி சாம்ராஜ்யம் கொடுப்பவரே போற்றி
ஓம் முக்கட்சுடரின் விருந்தே போற்றி
ஓம் முக்கண்கள் உடையவரே போற்றி
ஓம் முகமலரச் செய்பவரே போற்றி               900
ஓம் முக்தியை முன் நின்று கொடுப்பவரே போற்றி
ஓம் முச்சூலம் கொண்டவரே போற்றி
ஓம் முப்பத்து மூவருக்கு அதிபதியே போற்றி
ஓம் முடியாத சங்கீதமே போற்றி
ஓம் முடிவில்லா மூத்தவரே போற்றி                                ஓம் முத்தமிழும் ஆனவரே போற்றி
ஓம் முதலாவதாக இருப்பவரே போற்றி
ஓம் முத்துப்பற்கள் உடையவரே போற்றி
ஓம் முத்தலை வேற்படை உடையவரே போற்றி
ஓம் முதல் கடவுளே போற்றி                           910
ஓம் முத்தமிழ் காதலரே போற்றி
ஓம் முத்துச் சுடரே போற்றி
ஓம் முத்தொழிலுக்கும் முதல்வரே போற்றி
ஓம் முப்புரம் எரித்தவரே போற்றி
ஓம் மும்மைப்பொழுதும் காப்பவரே போற்றி
ஓம் மும்மையுலக முதல்வரே போற்றி
ஓம் முளைத்த பிறைமுடியோரே போற்றி
ஓம் முருக்குப் பிரியரே போற்றி
ஓம் முழுதுலகம் இனிது என்றவரே போற்றி
ஓம் முழுநீறு பூசும் முதல்வரே போற்றி                  920
ஓம் முழு நீற்றின் மூர்த்தியே போற்றி
ஓம் முழு தனம் தருபவரே போற்றி
ஓம் முன் நின்ற முக்தியே போற்றி
ஓம் முனிவர்கள் தொழும் முக்தியே போற்றி
ஓம் முனிவர்கள் விரும்பும் முரளியே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலகாரண மூர்த்தியே போற்றி
ஓம் மூலத்தவத்து முதல்வரே போற்றி
ஓம் மூலநிதியே போற்றி
ஓம் மூல முதல் ஆனவரே போற்றி               930
ஓம் மூல மூர்த்தியே போற்றி
ஓம் மூலாதாரமே போற்றி
ஓம் மூவாதமேனியே போற்றி
ஓம் மூவா முதல்வரே போற்றி
ஓம் மூன்று உலகம் ஆனவரே போற்றி
ஓம் மூன்று உலகங்களையும் காப்பவரே போற்றி
ஓம் மூன்றெழுங்கனலே போற்றி
ஓம் மெய்ஞானக் கடலமுதே போற்றி
ஓம் மெய்ப் பொருளே போற்றி
ஓம் மெய்ப்பொருள் ஆன வயிரவரே போற்றி           940
ஓம் மெய்ஞான முக்தியளிப்பவரே போற்றி
ஓம் மேன்மைக்கு அரசே போற்றி
ஓம் மேன்மை அருள்பவரே போற்றி
ஓம் மேன்மைக்குரியவரே போற்றி
ஓம் மேலான பிரபுவே போற்றி
ஓம் மேலவர்க்கும் மேலானவரே போற்றி
ஓம் மோட்சம் காப்பவரே போற்றி
ஓம் மோக வல்லபனே போற்றி
ஓம் யாக ரூபனே போற்றி
ஓம் யாகத்தின் இலக்கணமே போற்றி                950
ஓம் யாகத்தின் ஈஸ்வரரே போற்றி
ஓம் யாகத்திலும் எழும் முதல்வரே போற்றி
ஓம் யாகங்களின் தலைவரே போற்றி
ஓம் யாகமாகத் திகழ்பவரே போற்றி
ஓம் யாரும் அறியா இடத்தோய் போற்றி
ஓம் யுக முடிவிலும் நிற்பவரே போற்றி
ஓம் யோக நிலை அருள்பவரே போற்றி
ஓம் யோகத்தின் தலைவரே போற்றி
ஓம் யோகிகளின் தலைவரே போற்றி
ஓம் யோக நிலையோனே போற்றி                   960
ஓம் யோக வடிவமே போற்றி
ஓம் ராஜயோகம் கொடுப்பவரே போற்றி
ஓம் வசனப் பிரியனே போற்றி
ஓம் வற்றாத தனமே போற்றி
ஓம் வசீகரமுகம் உடையவரே போற்றி
ஓம் வசீகரம் செய்யும் வல்லவரே போற்றி
ஓம் வடைப்பிரியரே போற்றி
ஓம் வணக்கத்துக்குரியவரே போற்றி
ஓம் வரம்பின்றி அருள்பவரே போற்றி
ஓம் வரங்களைக் கொடுப்பவரே போற்றி              970
ஓம் வரமனைத்தும் தருவோரே போற்றி
ஓம் வறுமையின் மருந்தே போற்றி
ஓம் வலம்புரிச் சங்கே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வளம் தருபவனே போற்றி
ஓம் வாக்கு மேன்மையுடையவரே போற்றி
ஓம் வாக்கு வன்மை தருபவரே போற்றி
ஓம் வாசனைத் திரவியமே போற்றி
ஓம் வாசனைப் பொருட்கள் விரும்பியே போற்றி
ஓம் வாட்டம் தவிர்ப்போனே போற்றி                  980
ஓம் வாத பித்தம் அகற்றுபவரே போற்றி
ஓம் வாமனனைக் கிழித்தவரே போற்றி
ஓம் வாழ்விலும் தாழ்விலும் துணை நிற்பவரே போற்றி
ஓம் வாழை குலப்பிரியரே போற்றி
ஓம் வாள் ஏந்தியிருப்பவரே போற்றி
ஓம் விசை ஞானி காதலரே போற்றி
ஓம் விண்ணவர்க் கூட்டத் தலைவரே போற்றி
ஓம் விண்ணாகி நின்றவரே போற்றி
ஓம் விண்ணோர்கள் புகழும் குருவே போற்றி
ஓம் விண்ணவர்க்கு மேலாகி நின்றவரே போற்றி       990
ஓம் விந்தைகள் செய்வோரே போற்றி
ஓம் விதிகளை நியமிப்பவரே போற்றி
ஓம் விந்துவிற்கே அதிபதியே போற்றி
ஓம் விமலனே போற்றி
ஓம் விருப்பு வெறுப்பு அற்றவரே போற்றி
ஓம் விருப்பங்களின் தலைவரே போற்றி
ஓம் விரதங்களால் மகிழ்பவரே போற்றி
ஓம் விரிசுடர் விளக்கொளியே போற்றி                              ஓம் விழிப்புநிலை கொடுப்பவரே போற்றி
ஓம் விளக்காய் ஒளிர்பவரே போற்றி             1000
ஓம் விளைவே போற்றி
ஓம் வினை தீர அருள்பவரே போற்றி
ஓம் வினைகள் யாவும் அறுப்பவரே போற்றி
ஓம் விஸ்வரூபியே போற்றி
ஓம் வீடளிக்கும் அப்பரே போற்றி
ஓம் வீரம் அருள்பவரே போற்றி
ஓம் வீணை கானத்தில் மெய் மறப்பவரே போற்றி
ஓம் வீரச் சிங்கமே போற்றி போற்றி போற்றி              1008


இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு ஐந்து முதல் எட்டு மணி வரையிலான கால கட்டத்தில் நமது வீட்டுப் பூஜையறையில் ஜபிக்கலாம்;
அல்லது


மாதம் ஒரு நாள் மட்டும் ஜபிக்க விரும்புவோர்:=
ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திர நாட்களில் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துத் தயாராகி ஜபிக்கலாம்;ஒருவேளை அவ்வாறு ஜபிக்க இயலாதவர்கள் மாலை ஐந்து மணி முதல் எட்டு மணிக்குள் அவரவர் வீட்டுப்பூஜையறையில் அமர்ந்து ஜபிக்கலாம் அல்லது எழுதலாம்.இதன் மூலமாக சதாசிவனின் அருளுடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் அருளும் கிட்டும்.


விஜய வருடத்தின் திருவாதிரை வரும் நாட்கள் பட்டியல்:

16.4.13 செவ்வாய் காலை 8.32 முதல் 17.4.13 புதன் காலை 11.02 வரை;(புதன் அதிகாலையில் ஜபிக்கலாம்)


13.5.13 திங்கள் மதியம் 3.54 முதல் 14.5.13 செவ்வாய் மாலை 6.27 வரை;(செவ்வாய் அதிகாலையில் ஜபிக்கலாம்;அல்லது திங்கள் மாலையில் ஜபிக்கலாம்)


9.6.13 ஞாயிறு இரவு 11.14 முதல் 10.6.13 திங்கள் நள்ளிரவு 1.48 வரை;(திங்கள் அதிகாலை அல்லது மாலையில் ஜபிக்கலாம்)


7.7.13 ஞாயிறு காலை 6.30 முதல் 8.7.13 திங்கள் காலை 9.05 வரை அமாவாசையும் சேர்ந்தே வருகிறது(ஞாயிறு மாலை 4.30க்கு ஆரம்பிக்கலாம் அல்லது திங்கள் அதிகாலையில் ஜபிக்கலாம்)

3.8.13 சனி மதியம் 1.43 முதல் 4.8.13 ஞாயிறு மாலை 4.16 வரை;(ஞாயிறு காலை அல்லது சனிக்கிழமை மாலை)


30.8.13 வெள்ளி இரவு 8.52 முதல் 31.8.13 சனி இரவு 11.26 வரை;(சனிக்கிழமை அதிகாலை மற்றும் மாலையில் ஜெபிக்கலாம்)


26.9.13 வியாழன் பின்னிரவு 3.57 முதல் 28.9.13 சனி காலை 6 வரை(மூன்று நாட்கள் இருக்கிறது.வெள்ளிக்கிழமை காலை மற்றும் மாலையில் ஜபிக்கலாம்;)


24.10.13 வியாழன் காலை 11.01 முதல் 25.10.13 வெள்ளி மதியம் 1.32 வரை( வியாழக்கிழமை மாலை அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஜபிக்கலாம்)


20.11.13 புதன் மாலை 6.07 முதல் 21.11.13 வியாழன் இரவு 8.37 வரை(வியாழன் அதிகாலை அல்லது மாலையில் ஜபிக்கலாம்)

17.12.13 செவ்வாய் நள்ளிரவு 1.08 முதல் 18.12.13 புதன் நள்ளிரவு 3.30 வரை(மார்கழி மாத பவுர்ணமி இந்த நாளில் தான்)(புதன் அதிகாலையிலும் அந்தி மாலையிலும் ஜபிக்க வேண்டும்;எழுதவும் செய்யலாம்)


14.1.14 செவ்வாய் காலை 8.19 முதல் 15.1.14 புதன் காலை 10.44 வரை(புதன் அதிகாலை அல்லது செவ்வாய் மாலையில் ஜபிக்கலாம்;புதன் காலையில் இரண்டு மணி நேரம் பவுர்ணமி திதியும் சேர்ந்து வருகிறது;கலியுகத்தில் மட்டுமே இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழும்)


10.2.14 திங்கள் மதியம் 3.36 முதல் 11.2.14 செவ்வாய் மாலை 5.58 வரை(திங்கள் மாலை அல்லது செவ்வாய் அதிகாலையில் ஜபிக்கலாம்;எழுதலாம்)

9.3.14 ஞாயிறு இரவு 10.58 முதல் 10.3.14 திங்கள் நள்ளிரவு 1.17 வரை(திங்கள் அதிகாலை அல்லது மாலையில் ஜபிக்கலாம்;எழுதலாம்)

6.4.24 ஞாயிறு காலை 6.23 முதல் 7.4.14 திங்கள் காலை 8.40 வரை       ( திங்கள் கிழமை அதிகாலை மிக நன்று;இன்று தேய்பிறை அஷ்டமி!!!)
அல்லது



தினசரி ஜபிக்க விரும்புவோர்:=


எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை ஏழு முதல் எட்டு மணி வரையிலும்;மதியம் இரண்டு மணி முதல் மூன்று மணி வரையிலும்;இரவு ஒன்பது மணி முதல் பத்து மணிவரையிலும் ஜபிக்கலாம்;
எல்லா திங்கட்கிழமைகளிலும் காலை நான்கு முதல் ஐந்து மணி வரையிலும்;காலை பதினொன்று முதல் பனிரெண்டு மணி வரையிலும்;மாலை ஆறு முதல் ஏழு வரையிலும்;
எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் காலை எட்டு முதல் ஒன்பது மணி வரையிலும்;மதியம் மூன்று முதல் நான்கு வரையிலும்;இரவு பத்து முதல் பதினொன்று மணி வரையிலும்;
எல்லா புதன் கிழமைகளிலும் காலை ஐந்து முதல் ஆறு மணி வரையிலும்;மதியம் பனிரெண்டு முதல் ஒரு மணி வரையிலும்;இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரையிலும்;
எல்லா வியாழக்கிழமைகளிலும் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரையிலும்;மாலை நான்கு முதல் ஐந்து மணி வரையிலும்;இரவு பதினொன்று முதல் பனிரெண்டு வரையிலும்;
எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் காலை ஆறு முதல் ஏழு வரையிலும்;மதியம் ஒன்று முதல் இரண்டு வரையிலும்;இரவு எட்டு முதல் ஒன்பது மணி வரையிலும்
எல்லா சனிக்கிழமைகளிலும் காலை பத்து முதல் பதினொன்று மணி வரையிலும்;மாலை ஐந்து முதல் ஆறு மணி வரையிலும் ஜபிக்கலாம்.


இதில் பவுர்ணமியன்றும்,திருவாதிரையன்றும் ஜபிப்பதன் மூலமாக அளவற்ற செல்வச் செழிப்பை அடைய முடியும்.தினமும் மேலே கூறிய நேரத்தில் ஜபித்து வருவதால் மிகுந்த பலன்களை விரைவாக அடைய முடியும்.
ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,தனது வீட்டில் இருக்கும் மற்றவரை இந்த ஜபம் செய்யத் தூண்டலாம்.


ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்பவர்களே இந்த 1008 போற்றியை ஜபிக்கலாம்;அல்லது எழுதலாம்;



இந்த 1008 போற்றியை எழுத அல்லது ஜபிக்க விரும்புவோர் ஒருபோதும் அசைவம் சாப்பிடக் கூடாது;அவ்வாறு இருந்தால் வெகு விரைவில் வராக்கடன் வசூலாகிவிடும்;கொடுக்க வேண்டிய கடன்களை கொடுக்கும் அளவுக்கு நேர்மையான வழியில் பணவரவு ஏற்படும்;




பதவி உயர்வுக்கு ஏங்குவோர் அல்லது தொழிலில் அபார வளர்ச்சியை எதிர்பார்ப்போர் நிச்சயம் அவைகளை அவரவரின் ஜாதக பூர்வபுண்ணியம் மற்றும் மன உறுதிக்கேற்றவாறு குறைந்தது ஒரு வருடத்தில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் எட்டுவர்.செல்வச் செழிப்பையும் தான்!!!






இந்த உபதேசத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகருக்கு கூகுள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
ஓம்சிவசிவஓம்
Please see to this link for more powerful spiritual and astological information.
Thanks to
http://www.aanmigakkadal.com/

Total Pageviews

Followers