Thursday, November 1, 2018

கண்கள் பராமரிப்பு - எளிய முறைகள்

கண்கள் முக அழகை கூட்டக்கூடியது. அதிகம் சிந்தித்து வேலை பார்ப்பவர்களுக்கு மற்றும் கணினி வேலை பார்ப்பவர்க்கும் கண் எரிச்சல் மற்றும் கண் உறுத்தல் மிகவும் நெருடலை ஏற்படுத்தும். வேலையில் கவனம் செலுத்துவதும் கடினமாக இருக்கும். 

பொதுவாக இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் அதிக நேரம் கணினி மற்றும் மொபைல் வேலைகளில் ஈடுபடுகின்றனர். எனது நண்பர்கள் சில பேர் என்னிடம் கேட்ப்பார்கள் கண் எரிச்சல், கண் வலி மற்றும் கண் உறுத்தல் அதிகமாக உள்ளது, எதாவது வீட்டு வைத்தியம் அல்லது எளிய வைத்திய முறைகளை கேட்பார்கள்.

அவர்களுக்கு நான் கூறிய ஒரு சில வைத்திய முறைகள் மிகவும் பலனளித்தது. நீங்களும் அதை பின்பற்றி பயனடைய இதோ ஒரு சில வழி முறைகள். கீழ்கண்ட இந்த மூன்று முறைகளில் எதாவது ஒன்றையோ அல்லது மூன்றையுமே நீங்கள் செய்து பயனடையலாம்.

1. கற்றாழை வைத்தியம் 
கற்றாழை மடலில் இருக்கும் முட்கள் மற்றும் பச்சை நிற தோலை நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் வெள்ளை நிற சதை பகுதியை சிறிய மற்றும் மெல்லிய துண்டுகளாக செய்து எடுத்துக்கொள்ளவும்

இந்த கற்றாழை துண்டுகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் நிற பசை போன்ற திரவம் கண்களின் மேல் சில சமயம் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் மூன்று முறையாவது குளிர்ந்த நீர் விட்டு கழுவவும். 

முகம் கழுவிய பிறகு தினமும் இந்த கற்றாழை துண்டுகளை கண்களின் மேல் வைத்து (கண்களை மூடி கொள்ளவும்) சுத்தமான துணியை கொண்டு கண்களை கட்டிவிடவும்.

குறைந்தது ஒரு மணி நேரம் இதை வைத்து உறங்கவும் அல்லது  இரவு முழுவதும் கூட வைத்துக்கொள்ளலாம். பகலிலும்  உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்துக்கொண்டோ இதை செய்யலாம்.

கண்கள் மிகவும் பொலிவுடன் இருக்கும். குளிரிச்சியையும் நீங்கள் உணரலாம்.


2. நந்தியாவட்டை பூ வைத்தியம் 


நந்தியாவட்டை ஓரிதழ் அல்லது அக்கு இதழ் பூக்களை நன்கு கழுவி விட்டு பூ இதழ்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும். மிகச்சிறிய பூச்சிகள் இருக்கும்.மிகவும் கவனமுடன் கழுவி எடுத்துக்கொள்ளவும்.

முகம் கழுவிய பிறகு தினமும் இந்த பூ இதழ்களை கண்களின் மேல் (கண்களை மூடி கொள்ளவும்) வைத்து சுத்தமான துணியை கொண்டு கண்களை கட்டிவிடவும்.

குறைந்தது ஒரு மணி நேரம் இதை வைத்து உறங்கவும் அல்லது  இரவு முழுவதும் கூட வைத்துக்கொள்ளலாம். பகலிலும்  உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்துக்கொண்டோ இதை செய்யலாம்.

கண்கள் மிகவும் பொலிவுடன் இருக்கும். குளிரிச்சியையும் நீங்கள் உணரலாம்.

3. வெள்ளரிக்காய் வைத்தியம் 


வெள்ளரிக்காயை சிறிய மற்றும் மெல்லிய துண்டுகளாக செய்து எடுத்துக்கொள்ளவும் 

முகம் கழுவிய பிறகு தினமும் இந்த வெள்ளரி துண்டுகளை கண்களின் மேல் (கண்களை மூடி கொள்ளவும்) வைத்து சுத்தமான துணியை கொண்டு கண்களை கட்டிவிடவும்.

குறைந்தது ஒரு மணி நேரம் இதை வைத்து உறங்கவும் அல்லது  இரவு முழுவதும் கூட வைத்துக்கொள்ளலாம். பகலிலும்  உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்துக்கொண்டோ இதை செய்யலாம்.

கண்கள் மிகவும் பொலிவுடன் இருக்கும். குளிரிச்சியையும் நீங்கள் உணரலாம்.

இவையன்றி தலைக்கு எண்ணெய் தேய்த்து வாரம் ஒருமுறையாவது குளிக்கவும். அதிக பழங்கள் மற்றும் பச்சை காய்கறி சாலட் எடுத்துக்கொள்ளவும்.

இந்த தகவலை தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்.





Monday, October 8, 2018

வாழ்த்து கவிதை

சீரும் சிறப்புமாய்
வாழ்வும் வளமுமாய்
பேரும் புகழுமாய்
பாசமும் பண்புமாய் 
நன்றியும்   நட்புமாய்
காதலும் கனிவுமாய்
கருணையின் உருவமாய் 
சிரிப்பும் சிந்தனையுமாய்
ஆயகலையுடனும் அஷ்டலக்ஷ்மியுடனும் 
இன்றும் என்றும் 
வளமோடு வாழ 
உளமார வாழ்த்தும் அன்பு நெஞ்சம் 

தாய்மையுற்ற பெண்ணின் சுக பிரசவத்திற்காக வாழ்த்தும் நெஞ்சம்

பெண்மைக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் அனைத்திலும்
உச்சமாய் இருப்பது தாய்மை...

மகிழ்ச்சி பொங்க உள்ளம் நெகிழ 

மங்கள நிகழ்ச்சி இனிதே தொடர என் மனமார்ந்த

வாழ்த்துக்கள்!! 


சின்னக் குயிலாய் முத்துப் பிள்ளையாய் 

சிங்கார நடை கொண்டு 

அறிவுச்சுடராய் அகிலம் பாராட்ட 

அன்னையின் மடியில் அழகு சிரிப்புடன் 

அன்பு மழலை இனிதே தவழ என் ஆழ்ந்த பிரார்த்தனை 

தாயுமானவரின் தாழ் பணிந்து 

தாய்மையுற்ற பெண்ணின்  சுக பிரசவத்திற்காக!! 

சீரும் சிறப்புமாய்

வாழ்வும் வளமுமாய்

பேரும் புகழுமாய்

பாசமும் பண்புமாய் 

நன்றியும்   நட்புமாய்

காதலும் கனிவுமாய்

கருணையின் உருவமாய் 

சிரிப்பும் சிந்தனையுமாய்

ஆயகலையுடனும் அஷ்டலக்ஷ்மியுடனும் 

இன்றும் என்றும் 

வளமோடு வாழ 

உளமார வாழ்த்தும் நெஞ்சம் - தமக்கை லட்சுமி 

ஆயுத பூஜை


ஆயுத பூஜை வெளியே இருக்கும் ஆயுதங்களுக்கு அல்ல 
வெளி உலக ஆயுதங்களை மனிதன் தான் படைத்தான் 
மனிதனே நமக்கு பயன்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் 

உல் உலக ஆயுதங்களோ பல பல
அன்பு
காதல் 
பாசம் 
நட்பு 
பொறாமை 
காமம் 
நயவஞ்சகம் 
சூழ்ச்சி 
தாழ்வு மனப்பான்மை 
உயர்வு மனப்பான்மை 
பயம் 
துக்கம் 
கவலை 
சுயநலம் 
ஏமாற்றுதல் 
பிறரை வீழ்த்துதல் 
நம்பிக்கையின்மை 
பேராசை
வெறுப்பு
எதிரி தன்மை 
அஹங்காரம் 
நன்றியின்மை 
பொறுப்பின்மை  
சோம்பல் 
தூக்கம்
நேர்மறை எண்ணம் மற்றும் எதிர்மறை எண்ணம்      
இன்னும் எத்தனையோ ஆயுதங்கள் நமக்குள் கிடங்கு போல 
இத்தனை ஆயுதங்களும் நம்மை காயபடுத்தாமலும்  பிறரை  காயபடுத்தாமலும்
எப்படி கையாள்வது 
மேலும் இந்த ஆயுதங்களை கொண்டு 
நம்மை நாமே எப்படி செதுக்கி 
"அற்புத  சிற்பமாய்" வெளிபடுத்துவது 
என்ற வித்தையை 
சரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே 
ஆயுத பூஜை!    
 

இப்படிக்கு
லக்ஷ்மி

Sunday, October 7, 2018

வைர "முத்துவின்" தண்ணீர் தேசத்திலிருந்து நான் எடுத்த முத்துக்கள்

வைர "முத்துவின்" தண்ணீர் தேசத்திலிருந்து நான் எடுத்த முத்துக்கள் 
உணர்வுகளின் தேவை காதல்
உணர்சிகளின் தேவை காமம் 
உலகத்தின் தேவை உழைப்பு 
இந்த தேவைகளின் வெவ்வேறு 
வடிவங்கள் வாழ்க்கை   
அழுகையும் அச்சமும்
தீர்ந்த நிலை தான்
சுதந்திரம்

விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்ககூடாது
நகம் வெட்டும் நேரம் மிச்சம் எண்டு நினைத்து கொள்வோம் 

படகு பழுது என்றல் பதறிக் 
கொண்டிருக்கக்கூடாது 
கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்கு 
குறிப்பெடுப்போம் 

எரிந்து விட்டது வீடு
இனி 
தெளிவை தெரியும் 
நிலவு
இந்த கவிதையை வழக்கபடுத்தி கற்றுக்கொண்டேன்

தண்ணீரில் எடையிழக்கும் மரம் போல 
துன்பம் எடையிழந்தது 

தங்கத்தின் துருவல்களை சேகரித்தே 
ஒரு நகை செய்துவிடுவது போல 
கஷ்டங்களை சேகரித்தே 
நாம் கலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் 

வாழ்வின் மர்மம் தான் வாழ்வின் ருசி 
நாளை நேர்வர்வதரியாத சூட்சுமங்கள்  தான்
அதன்  சுவை
எதிர்பாராத வெற்றி தான் மனித மகிழ்ச்சி 

தோல்வியும் எதிர்பாராமல் வருவதால் தான் 
மனிதன் அதன் முன் நிமிடம் வரைக்கும் 
முயற்ச்சியில் இருக்கிறான் 

மரணத்தின் தேதி மட்டும் மனிதனுக்கு
தெரிந்துவிட்டால் மரணம் வரும்முன்பே 
அவன் மரித்துப் போவான்
ஐம் பூதங்கள் தந்த இந்த உடலை நாளை 
ஐம் பூதங்கள் பிரித்தெடுத்துக் கொள்ளலாம் 
ஆனால்   மரணம் என்ற பௌதிகச் 
சம்பவத்தால் நாம் மரிக்கப் போவதில்லை 

ஒரு மனிதன் 
எத்தனை நாடுகள் கடந்தான் 
எத்தனை நாடுகள் கடல்கள் கடந்தான் 
எத்தனை  பேரை கொன்றான்
எத்தனை   மகுடம் சூடினான்
எத்தனை   காலம் இருந்தான் 
எத்தனை   பிள்ளைகள் ஈன்றான் 
என்பன அல்ல அவன் எச்சங்கள் 
இவை எல்லாம் நான் என்ற 
ஆணவத்தின் நீளங்கள் 

அவன் இன்னோர் உயிருக்காக 
எத்தனை  முறை அழுதான் என்பது தான் 
அவன் மனிதன் 
என்பதற்கான மாறாத சாட்சி     
    
 ஒருவன் தனக்காக அழும் கண்ணீர் 
அவனை மட்டுமே சுத்திகரிக்கிறது 
அடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே 
சுத்திகரிக்கிறது  

பேதையாய் கூட இரு கோழையாய் இராதே 
இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நேரலாம் 
இன்று காண்பது நாளை மாறலாம் 
மாற்றமே பரிணாமம் மாறுதல் ஒன்று தான் 
உலகில் மாறாதிருப்பது 

இந்த சிறகத் தொகுதியும் காட்சி மாறலாம் 

மனித வாழ்வின் பெருந்துன்பம் எது தெரியுமா?

மரணத்தைவிட வாழ்க்கை பயங்கரமானது என்று 
தெரிந்த பின்னும் வாழ்க்கையோடு
ஒட்டிக் கொண்டிருப்பது தான் 
மரணத்தின் வாசல் வரை சென்று 
மீண்டவர்களுக்கே வாழ்வின் பெருமை விளங்கும் 

வாழ்கையை துளி துளித்துளியாய் ரசித்தால் 
வாழ்வின் ஒவ்வொரு கணமும் 
பெருமையுடையதாகும் 
ஒவ்வொரு புல்லிலும்பூவிலும் தீராத 
வாழ்க்கை தேங்கி நிற்பது தெரியும் 
தான் உதிரும் முதல் நிமிடம் வரைக்கும் 
இந்த பிரபஞ்சத்தின் சந்தோசத்தை 
மட்டுமே காற்றோடு பேசிக்கொண்டிருக்கும் 
ஒரு தென்னங்கீற்றை பூல இனி இன்பமாயிறு
          

வாழ்வின் பெருமையை உயர்த்துவதும் 
உறுப்புகளின் பெருமையை உணர்த்துவதும் 
நேற்றைய இன்றைய நிகழ்வுகளை நேசிக்கவைப்பதும் 
தன்னைச் சார்ந்தவர் பற்றி யோசிக்க வைப்பதும் 
செலுத்தப்படாத அன்பைச் செலுத்தச் செய்வதும் 
திமிர் கொண்டாடும் தேகத்தை 
ஞானபாதைக்கு அழைத்து வருவதும் 
மனிதனுள்ளிருக்கும்
சிங்கம் புலிகளைத் துரத்தியடிப்பதும் 
கடந்த காலத் தவறுகளை எண்ணிக் 
கடை விழியில் நீரொழுக வைப்பதும் 
நோய்தான்! 

ஆகவே உடம்பே! அவ்வப்போது 
கொஞ்சம் நோய் பெறுக!  
ஆகவே உடம்பே! அவ்வப்போது 
கொஞ்சம் நோய் பெறுக!  
நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம் 
ஆனால் நோயும் ஒரு செல்வமென்று 
பட்டுத்தெளிமனமே பட்டுத்தெளி    

  
 எது பிறப்புஎது இறப்பு
இரண்டிலும் நான் தெளிவாகவே இருக்கிறேன் 
பிறப்பு என்பது ஐம் பூதங்கள் கொதித்த கடன் 
இறப்பு என்பது ஐம் பூதங்களின் வசூல் 
நிலம், நீர், தீ, வளி, வெளி 
என்றும் ஐம் பூதங்கல் மீண்டும் 
பிரித்தெடுத்து கொள்கின்றன 

என் பாதம் தாங்கிய மண்ணே.. நன்றி 
என்  ரத்தமான தண்ணீரே..  நன்றி 
எனக்குள் ஒளி கொடுத்த தீயே  நன்றி 
என் உயிரை இயக்கிய காற்றே  நன்றி 
எங்களுக்கு நிலவும் கதிரும் மழையும் 
கொடுத்த ஆகாயமே  நன்றி 

  

Thursday, September 27, 2018

தேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்..!




தேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்..!
🐝🐝🐝🐝🐝🐝🐝🐝

🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இனிக்கும் செய்தியல்ல....!

🐝தேனீ...
.............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?

முதலில்... ஆச்சரியம்.

🐝தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.

🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது.

🐝யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம். 
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.

🐝இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன.

ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...

🐝அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான்.

🐝ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது.

🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ.

🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

🐝 மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும்.

🐝ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

🐝இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை.

🐝ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை.

🐝மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

🐝தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது.

🐝தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.

🐝ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும்.

🐝கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு.

🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

🐝அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது?

🐝குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது.

🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.

🐝அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும்.

🐝அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

🐝கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

🐝பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும்.

🐝இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும்.

🐝தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள்.

🐝அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம் !

🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.

🐝புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும்.

🐝அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.

🐝உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.

🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.

🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.

வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.

🐝இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.

🐝தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''

🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. 
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

🐝இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.

🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.

🐝ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும்.

🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

🐝பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

🐝அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.

🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.

🐝இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும்.

🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள். 
🐝அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

🐝இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.

🐝அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள்.

🐝பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’

Total Pageviews

Followers