Monday, August 8, 2022

வெட்டு காயம் குணமடைய வீட்டு வைத்தியம்

 

சோற்றுக்கற்றாழை உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்பட்ட காயங்கள் அல்லது தீக்காயங்களைக் குணப்படுத்த சிறந்த தீர்வாகும்.


1. கற்றாழை இதழின் சிறிது பகுதியை எடுத்துக் கொள்ளவும்


2. மஞ்சள் நிற திரவத்துடன் ஜெல்லை வெளியே எடுக்கவும்


3. கழுவவே தேவையில்லை


4. பாதிக்கப்பட்ட பகுதி அல்லது இரத்தப்போக்கு பகுதிக்கு ஜெல் தடவவும்


5. பத்து முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு, பின் கழுவவும். நீங்கள் குளிர் அல்லது குளிர்ச்சியை உணர்வீர்கள் !!! வலியை விட???


6. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும்


7. ஒரு தழும்பு கூட இல்லாமல் ஒரு குறுகிய காலத்தில் குணப்படுத்துதல் அல்லது குணப்படுத்துதல் நடக்கும்

வீட்டு வைத்தியம் - வெங்காயம்

 


வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், விரட்டி, அழற்சி எதிர்ப்பு, வலுவான பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

வெங்காயம் பல வகையான நோய்களை குணப்படுத்தும்

  • குளிர்
  • இருமல்
  • அதிக காய்ச்சல்
  • தொண்டை வலி
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், சிறிது வெங்காயத்தை நறுக்கி, ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை குடிநீரில் ஊற வைக்கவும். இந்த நீரை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு டேபிள் ஸ்பூன் வரை குடித்து வந்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

Thursday, November 1, 2018

கண்கள் பராமரிப்பு - எளிய முறைகள்

கண்கள் முக அழகை கூட்டக்கூடியது. அதிகம் சிந்தித்து வேலை பார்ப்பவர்களுக்கு மற்றும் கணினி வேலை பார்ப்பவர்க்கும் கண் எரிச்சல் மற்றும் கண் உறுத்தல் மிகவும் நெருடலை ஏற்படுத்தும். வேலையில் கவனம் செலுத்துவதும் கடினமாக இருக்கும். 

பொதுவாக இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் அதிக நேரம் கணினி மற்றும் மொபைல் வேலைகளில் ஈடுபடுகின்றனர். எனது நண்பர்கள் சில பேர் என்னிடம் கேட்ப்பார்கள் கண் எரிச்சல், கண் வலி மற்றும் கண் உறுத்தல் அதிகமாக உள்ளது, எதாவது வீட்டு வைத்தியம் அல்லது எளிய வைத்திய முறைகளை கேட்பார்கள்.

அவர்களுக்கு நான் கூறிய ஒரு சில வைத்திய முறைகள் மிகவும் பலனளித்தது. நீங்களும் அதை பின்பற்றி பயனடைய இதோ ஒரு சில வழி முறைகள். கீழ்கண்ட இந்த மூன்று முறைகளில் எதாவது ஒன்றையோ அல்லது மூன்றையுமே நீங்கள் செய்து பயனடையலாம்.

1. கற்றாழை வைத்தியம் 
கற்றாழை மடலில் இருக்கும் முட்கள் மற்றும் பச்சை நிற தோலை நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் வெள்ளை நிற சதை பகுதியை சிறிய மற்றும் மெல்லிய துண்டுகளாக செய்து எடுத்துக்கொள்ளவும்

இந்த கற்றாழை துண்டுகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் நிற பசை போன்ற திரவம் கண்களின் மேல் சில சமயம் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் மூன்று முறையாவது குளிர்ந்த நீர் விட்டு கழுவவும். 

முகம் கழுவிய பிறகு தினமும் இந்த கற்றாழை துண்டுகளை கண்களின் மேல் வைத்து (கண்களை மூடி கொள்ளவும்) சுத்தமான துணியை கொண்டு கண்களை கட்டிவிடவும்.

குறைந்தது ஒரு மணி நேரம் இதை வைத்து உறங்கவும் அல்லது  இரவு முழுவதும் கூட வைத்துக்கொள்ளலாம். பகலிலும்  உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்துக்கொண்டோ இதை செய்யலாம்.

கண்கள் மிகவும் பொலிவுடன் இருக்கும். குளிரிச்சியையும் நீங்கள் உணரலாம்.


2. நந்தியாவட்டை பூ வைத்தியம் 


நந்தியாவட்டை ஓரிதழ் அல்லது அக்கு இதழ் பூக்களை நன்கு கழுவி விட்டு பூ இதழ்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும். மிகச்சிறிய பூச்சிகள் இருக்கும்.மிகவும் கவனமுடன் கழுவி எடுத்துக்கொள்ளவும்.

முகம் கழுவிய பிறகு தினமும் இந்த பூ இதழ்களை கண்களின் மேல் (கண்களை மூடி கொள்ளவும்) வைத்து சுத்தமான துணியை கொண்டு கண்களை கட்டிவிடவும்.

குறைந்தது ஒரு மணி நேரம் இதை வைத்து உறங்கவும் அல்லது  இரவு முழுவதும் கூட வைத்துக்கொள்ளலாம். பகலிலும்  உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்துக்கொண்டோ இதை செய்யலாம்.

கண்கள் மிகவும் பொலிவுடன் இருக்கும். குளிரிச்சியையும் நீங்கள் உணரலாம்.

3. வெள்ளரிக்காய் வைத்தியம் 


வெள்ளரிக்காயை சிறிய மற்றும் மெல்லிய துண்டுகளாக செய்து எடுத்துக்கொள்ளவும் 

முகம் கழுவிய பிறகு தினமும் இந்த வெள்ளரி துண்டுகளை கண்களின் மேல் (கண்களை மூடி கொள்ளவும்) வைத்து சுத்தமான துணியை கொண்டு கண்களை கட்டிவிடவும்.

குறைந்தது ஒரு மணி நேரம் இதை வைத்து உறங்கவும் அல்லது  இரவு முழுவதும் கூட வைத்துக்கொள்ளலாம். பகலிலும்  உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்துக்கொண்டோ இதை செய்யலாம்.

கண்கள் மிகவும் பொலிவுடன் இருக்கும். குளிரிச்சியையும் நீங்கள் உணரலாம்.

இவையன்றி தலைக்கு எண்ணெய் தேய்த்து வாரம் ஒருமுறையாவது குளிக்கவும். அதிக பழங்கள் மற்றும் பச்சை காய்கறி சாலட் எடுத்துக்கொள்ளவும்.

இந்த தகவலை தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்.





Monday, October 8, 2018

வாழ்த்து கவிதை

சீரும் சிறப்புமாய்
வாழ்வும் வளமுமாய்
பேரும் புகழுமாய்
பாசமும் பண்புமாய் 
நன்றியும்   நட்புமாய்
காதலும் கனிவுமாய்
கருணையின் உருவமாய் 
சிரிப்பும் சிந்தனையுமாய்
ஆயகலையுடனும் அஷ்டலக்ஷ்மியுடனும் 
இன்றும் என்றும் 
வளமோடு வாழ 
உளமார வாழ்த்தும் அன்பு நெஞ்சம் 

தாய்மையுற்ற பெண்ணின் சுக பிரசவத்திற்காக வாழ்த்தும் நெஞ்சம்

பெண்மைக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் அனைத்திலும்
உச்சமாய் இருப்பது தாய்மை...

மகிழ்ச்சி பொங்க உள்ளம் நெகிழ 

மங்கள நிகழ்ச்சி இனிதே தொடர என் மனமார்ந்த

வாழ்த்துக்கள்!! 


சின்னக் குயிலாய் முத்துப் பிள்ளையாய் 

சிங்கார நடை கொண்டு 

அறிவுச்சுடராய் அகிலம் பாராட்ட 

அன்னையின் மடியில் அழகு சிரிப்புடன் 

அன்பு மழலை இனிதே தவழ என் ஆழ்ந்த பிரார்த்தனை 

தாயுமானவரின் தாழ் பணிந்து 

தாய்மையுற்ற பெண்ணின்  சுக பிரசவத்திற்காக!! 

சீரும் சிறப்புமாய்

வாழ்வும் வளமுமாய்

பேரும் புகழுமாய்

பாசமும் பண்புமாய் 

நன்றியும்   நட்புமாய்

காதலும் கனிவுமாய்

கருணையின் உருவமாய் 

சிரிப்பும் சிந்தனையுமாய்

ஆயகலையுடனும் அஷ்டலக்ஷ்மியுடனும் 

இன்றும் என்றும் 

வளமோடு வாழ 

உளமார வாழ்த்தும் நெஞ்சம் - தமக்கை லட்சுமி 

ஆயுத பூஜை


ஆயுத பூஜை வெளியே இருக்கும் ஆயுதங்களுக்கு அல்ல 
வெளி உலக ஆயுதங்களை மனிதன் தான் படைத்தான் 
மனிதனே நமக்கு பயன்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் 

உல் உலக ஆயுதங்களோ பல பல
அன்பு
காதல் 
பாசம் 
நட்பு 
பொறாமை 
காமம் 
நயவஞ்சகம் 
சூழ்ச்சி 
தாழ்வு மனப்பான்மை 
உயர்வு மனப்பான்மை 
பயம் 
துக்கம் 
கவலை 
சுயநலம் 
ஏமாற்றுதல் 
பிறரை வீழ்த்துதல் 
நம்பிக்கையின்மை 
பேராசை
வெறுப்பு
எதிரி தன்மை 
அஹங்காரம் 
நன்றியின்மை 
பொறுப்பின்மை  
சோம்பல் 
தூக்கம்
நேர்மறை எண்ணம் மற்றும் எதிர்மறை எண்ணம்      
இன்னும் எத்தனையோ ஆயுதங்கள் நமக்குள் கிடங்கு போல 
இத்தனை ஆயுதங்களும் நம்மை காயபடுத்தாமலும்  பிறரை  காயபடுத்தாமலும்
எப்படி கையாள்வது 
மேலும் இந்த ஆயுதங்களை கொண்டு 
நம்மை நாமே எப்படி செதுக்கி 
"அற்புத  சிற்பமாய்" வெளிபடுத்துவது 
என்ற வித்தையை 
சரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே 
ஆயுத பூஜை!    
 

இப்படிக்கு
லக்ஷ்மி

Sunday, October 7, 2018

வைர "முத்துவின்" தண்ணீர் தேசத்திலிருந்து நான் எடுத்த முத்துக்கள்

வைர "முத்துவின்" தண்ணீர் தேசத்திலிருந்து நான் எடுத்த முத்துக்கள் 
உணர்வுகளின் தேவை காதல்
உணர்சிகளின் தேவை காமம் 
உலகத்தின் தேவை உழைப்பு 
இந்த தேவைகளின் வெவ்வேறு 
வடிவங்கள் வாழ்க்கை   
அழுகையும் அச்சமும்
தீர்ந்த நிலை தான்
சுதந்திரம்

விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்ககூடாது
நகம் வெட்டும் நேரம் மிச்சம் எண்டு நினைத்து கொள்வோம் 

படகு பழுது என்றல் பதறிக் 
கொண்டிருக்கக்கூடாது 
கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்கு 
குறிப்பெடுப்போம் 

எரிந்து விட்டது வீடு
இனி 
தெளிவை தெரியும் 
நிலவு
இந்த கவிதையை வழக்கபடுத்தி கற்றுக்கொண்டேன்

தண்ணீரில் எடையிழக்கும் மரம் போல 
துன்பம் எடையிழந்தது 

தங்கத்தின் துருவல்களை சேகரித்தே 
ஒரு நகை செய்துவிடுவது போல 
கஷ்டங்களை சேகரித்தே 
நாம் கலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் 

வாழ்வின் மர்மம் தான் வாழ்வின் ருசி 
நாளை நேர்வர்வதரியாத சூட்சுமங்கள்  தான்
அதன்  சுவை
எதிர்பாராத வெற்றி தான் மனித மகிழ்ச்சி 

தோல்வியும் எதிர்பாராமல் வருவதால் தான் 
மனிதன் அதன் முன் நிமிடம் வரைக்கும் 
முயற்ச்சியில் இருக்கிறான் 

மரணத்தின் தேதி மட்டும் மனிதனுக்கு
தெரிந்துவிட்டால் மரணம் வரும்முன்பே 
அவன் மரித்துப் போவான்
ஐம் பூதங்கள் தந்த இந்த உடலை நாளை 
ஐம் பூதங்கள் பிரித்தெடுத்துக் கொள்ளலாம் 
ஆனால்   மரணம் என்ற பௌதிகச் 
சம்பவத்தால் நாம் மரிக்கப் போவதில்லை 

ஒரு மனிதன் 
எத்தனை நாடுகள் கடந்தான் 
எத்தனை நாடுகள் கடல்கள் கடந்தான் 
எத்தனை  பேரை கொன்றான்
எத்தனை   மகுடம் சூடினான்
எத்தனை   காலம் இருந்தான் 
எத்தனை   பிள்ளைகள் ஈன்றான் 
என்பன அல்ல அவன் எச்சங்கள் 
இவை எல்லாம் நான் என்ற 
ஆணவத்தின் நீளங்கள் 

அவன் இன்னோர் உயிருக்காக 
எத்தனை  முறை அழுதான் என்பது தான் 
அவன் மனிதன் 
என்பதற்கான மாறாத சாட்சி     
    
 ஒருவன் தனக்காக அழும் கண்ணீர் 
அவனை மட்டுமே சுத்திகரிக்கிறது 
அடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே 
சுத்திகரிக்கிறது  

பேதையாய் கூட இரு கோழையாய் இராதே 
இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நேரலாம் 
இன்று காண்பது நாளை மாறலாம் 
மாற்றமே பரிணாமம் மாறுதல் ஒன்று தான் 
உலகில் மாறாதிருப்பது 

இந்த சிறகத் தொகுதியும் காட்சி மாறலாம் 

மனித வாழ்வின் பெருந்துன்பம் எது தெரியுமா?

மரணத்தைவிட வாழ்க்கை பயங்கரமானது என்று 
தெரிந்த பின்னும் வாழ்க்கையோடு
ஒட்டிக் கொண்டிருப்பது தான் 
மரணத்தின் வாசல் வரை சென்று 
மீண்டவர்களுக்கே வாழ்வின் பெருமை விளங்கும் 

வாழ்கையை துளி துளித்துளியாய் ரசித்தால் 
வாழ்வின் ஒவ்வொரு கணமும் 
பெருமையுடையதாகும் 
ஒவ்வொரு புல்லிலும்பூவிலும் தீராத 
வாழ்க்கை தேங்கி நிற்பது தெரியும் 
தான் உதிரும் முதல் நிமிடம் வரைக்கும் 
இந்த பிரபஞ்சத்தின் சந்தோசத்தை 
மட்டுமே காற்றோடு பேசிக்கொண்டிருக்கும் 
ஒரு தென்னங்கீற்றை பூல இனி இன்பமாயிறு
          

வாழ்வின் பெருமையை உயர்த்துவதும் 
உறுப்புகளின் பெருமையை உணர்த்துவதும் 
நேற்றைய இன்றைய நிகழ்வுகளை நேசிக்கவைப்பதும் 
தன்னைச் சார்ந்தவர் பற்றி யோசிக்க வைப்பதும் 
செலுத்தப்படாத அன்பைச் செலுத்தச் செய்வதும் 
திமிர் கொண்டாடும் தேகத்தை 
ஞானபாதைக்கு அழைத்து வருவதும் 
மனிதனுள்ளிருக்கும்
சிங்கம் புலிகளைத் துரத்தியடிப்பதும் 
கடந்த காலத் தவறுகளை எண்ணிக் 
கடை விழியில் நீரொழுக வைப்பதும் 
நோய்தான்! 

ஆகவே உடம்பே! அவ்வப்போது 
கொஞ்சம் நோய் பெறுக!  
ஆகவே உடம்பே! அவ்வப்போது 
கொஞ்சம் நோய் பெறுக!  
நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம் 
ஆனால் நோயும் ஒரு செல்வமென்று 
பட்டுத்தெளிமனமே பட்டுத்தெளி    

  
 எது பிறப்புஎது இறப்பு
இரண்டிலும் நான் தெளிவாகவே இருக்கிறேன் 
பிறப்பு என்பது ஐம் பூதங்கள் கொதித்த கடன் 
இறப்பு என்பது ஐம் பூதங்களின் வசூல் 
நிலம், நீர், தீ, வளி, வெளி 
என்றும் ஐம் பூதங்கல் மீண்டும் 
பிரித்தெடுத்து கொள்கின்றன 

என் பாதம் தாங்கிய மண்ணே.. நன்றி 
என்  ரத்தமான தண்ணீரே..  நன்றி 
எனக்குள் ஒளி கொடுத்த தீயே  நன்றி 
என் உயிரை இயக்கிய காற்றே  நன்றி 
எங்களுக்கு நிலவும் கதிரும் மழையும் 
கொடுத்த ஆகாயமே  நன்றி 

  

Total Pageviews

Followers