Showing posts with label உண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும்.. Show all posts
Showing posts with label உண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும்.. Show all posts

Tuesday, October 11, 2011

உணவை எப்படி உண்பது



உணவு என்பது உடலை வளர்பதற்கு மட்டும் அல்ல, உயிர் தன்மையை மேம்படுத்துவதற்கும் உரிய உபாயம்.
உணவை உரிய முறையில் உண்டால் அது நன்மையை விளைவிக்கும், முறை தவறி  உண்டால் அதுவே தீமையை விளைவிக்கும்.

பல நோயிற்கு காரணம் உண்ணும் உணவும், உண்ணுகிற விதமுமே!!!

"பட்டினியால் இறப்பவர்களை காட்டிலும் அதிகம் உண்பதால் நோயுற்று ஆயுள் குறைந்து இறப்பர்களே அதிகம்."

புத்தர் எப்படி உணவு உன்ன வேண்டும் என்று உபதேசித்ததில் சில வரிகள் 

உணவு உண்ணும் பொது மௌனமாக உன்ன வேண்டும்.
உணவை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.
பேசுவதை தவிர்க்க வேண்டும்.
உதட்டை மூடி நன்கு மெல்ல வேண்டும்.
அதிகம் உண்ணாமல் இருப்பது ஆயுளுக்கு மேன்மை.  
உண்ணும் போது  உணவே உலகமாக வேண்டும்.
கடவுளுக்கு நன்றி உணர்வோடு சாப்பிடவேண்டும்.
சமைப்பவர் முதல் பரிமாறுபவர்  வரை உணவை நைவேத்தியமாக மாற்றினால் 

உண்பது தியானமாகும் 
பசியாருவது ஞானமாகும்.  
உணவு அமிர்தமாகும்.  

Total Pageviews

Followers