Showing posts with label அதிக நார் சத்து நிரந்த உணவு. Show all posts
Showing posts with label அதிக நார் சத்து நிரந்த உணவு. Show all posts

Tuesday, October 11, 2011

காய்கறி வற்றலை பற்றி ஒரு அறிய தகவல்

அதிக நார் சத்து நிரந்த உணவு 
காய்கறிகளில் அதிக நார் சத்து இருப்பதை பற்றி நாம் அனைவரும் அறிந்த உண்மையே!!!
ஆனால் உலர வாய்த்த காய் கறிகளின்/வற்றலின் மகத்துவத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

சில காய்களை நாம் உலர வைத்து பன்படுத்துவதால் பல நன்மைகள் நமக்கு உண்டு.    

  1. உண்மையில் அதிக நார் சத்து உலர வைத்த வற்றலில்/காய் கறிகளில் இருந்து அதிகமாக கிடைக்கிறது.
  2. மலசிக்கலை வெகு எளிதாக தீர்க்க வற்றல் குழம்பு மற்றும் வற்றலில் சமைத்த உணவு பெரிதும் உதவுகிறது.
  3. அதனால் காய் கறிகளை போலே காய் வற்றலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.       
காய்களை நறுக்கி மோரில் பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து பின்பு சூரிய வெளிச்சத்தில் நன்கு காயவைத்து சேமித்து வைத்து கொள்ளலாம். காய்களின் விலை குறையும் போது இப்படி செய்து வைத்துக்கொண்டால் பெரிதும் நன்று. பொருளாதார ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் நன்கு பயனடையலாம்.

வற்றல் செய்ய உகந்த காய்கள் :
  1. சுண்டை காய் 
  2. வெண்டை காய்
  3. கத்தரிக்காய் 
  4. சுக்குட்டி/மணத்தக்காளி காய் 
  5. பாவைக்காய்
  6. கொத்தவரங்காய் 
  7. மாங்காய்
  8. கோவைக்காய் 
  9. மிளகாய் [மோர் மிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது]    

Total Pageviews

Followers