Sunday, September 22, 2013

ஹிந்துத்துவம் என்பது பண்பும்,பலமும் தான்!!!


நிதீஷ்குமார் சிறந்த மதச்சார்பின்மையாளர்(செக்யூலர்) என்று சமீபகாலமாக கூறப்பட்டுவருகிறது.இதைவிட அட்டகாசமான ஜோக் வேறு எதுவும் இருக்கமுடியாது.ஆமாம்,செக்யூலராக இருப்பது என்றால் என்ன? முஸ்லீம்கள் குல்லா இல்லாமல் தென்படுவதில்லை; ‘நான் முஸ்லீமாக்கும்’ என்று ஊருக்கு உணர்த்துகிறார்களாம்.செக்குலராக இருப்பது என்றால் இதுதானே?
முஸ்லீம் வகுப்புவாதிகளிடம் மண்டியிடுவது செக்குலர் ஆகிவிடாது.நரேந்திரமோடியிடம் முஸ்லீம்கள் குல்லா கொடுத்தார்கள்.அவர் அதை அணிய மறுத்தது நியாயம்.அவர் தான் திடமான செக்குலர்வாதி! முஸ்லீம் குல்லா அணிவது வகுப்புவாதம் அல்ல என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினால் அவர்கள் அனைவரும் முஸ்லீம் குல்லா அணியவேண்டியது தானே? ஏன் அணியவில்லை?
முஸ்லீம்களை தாஜா செய்வதற்காக நிதீஷ்குமார் விடாப்பிடியாக குல்லா அணிந்துவருகிறார்.டாக்டர் ராம் மனோகர் லோகியாவுக்கு இதைவிட அவமானத்தை அளித்துவிடமுடியாது.நிதீஷ்குமாரின் செயல்பாடு வெட்கக்கேடானது.
மறுபுறம்,ஹிந்துத்துவத்தை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.ஹிந்துயிசத்தின் சாராம்சமே ஹிந்துத்துவம்.உலகிலேயே ஹிந்துவைப் போல மதச் சுதந்திரம் உள்ளவர் வேறு யாரும் இல்லை;ஹிந்துக்கள் துவைதத்தையோ,அத்வைதத்தையோ,விசிஷ்டாத்வைதத்தையோ பின்பற்றலாம்;ஏன் இவற்றை நிராகரிக்கவும் செய்யலாம்;அந்த அளவுக்கு சுதந்திரம் உடையவர்கள் ஹிந்துக்கள்.
முஸ்லீம்களைப் போலவோ கிறிஸ்தவப் பாதிரிகளைப் போலவோ மற்றவர்களை தங்களின் விசால நோக்குள்ள மதத்திற்கு மாற்ற ஹிந்துக்கள் ஒருபோதும் முயற்சி செய்ததில்லை;கடந்த காலத்தில் ஹிந்து அரசர்கள் யாரேனும் ஒரு மசூதியையாவது தரைமட்டமாக்கியதாக கூறமுடியுமா? ஏதாவது ஒரு சர்ச்சை இடித்ததாக கூற முடியுமா?
மாறாக இஸ்லாமிய அரசர்கள் கோவில்களை ஆயிரக்கணக்கில் இடித்து தரைமட்டமாக்கியதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.கோவாவில் கிறிஸ்தவ மிஷனரிகள் செய்தது இதை விட   மோசம்.
விநாயக தாமோதர சாவர்க்கர் 1923 இல் தேசியம் என்பதை விளக்குவதற்கு ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார்.அதில் அவர் முதல் முறையாக ஹிந்துத்வம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.சுதேசி மதமான தங்கள் மதத்தை குறித்து ஹிந்துக்களுக்கு பெருமிதம் ஏற்படுவது அடாத செயலா என்ன? பாரதம் சார்ந்த அனைத்தையும் தழுவியது ஹிந்துத்துவம் என்பதே சாவர்க்கரின் கருத்து. “ஹிந்துத்துவம் என்பது ஒரு சொல் அல்ல,அது ஒரு வரலாறு.நமது மக்களின் ஆன்மீக,சமய வரலாறு மட்டும் அல்ல அது;அப்படி கருதுவது தவறு;நமது முழுமுதல் வரலாறே ஹிந்துத்துவம் தான்.சிந்தனை,செயல்மட்டங்களில் அனைத்தையும் தழுவியது ஹிந்துத்துவம்” என்பது சாவர்க்கரின் வாக்கு.
மாதவ சதாசிவ கோல்வல்கர்(ஸ்ரீகுருஜி) “பாரதத்தில் மரபுகளும்,பாரம்பரியங்களும்,வழிபடுமுறைகளும் இவ்வளவு விதவிதமாக இருப்பதே தேசத்தின் ஈடு இணையற்ற தன்மை” என்பார்;
“இவ்வளவு வேற்றுமைகள் தென்பட்டாலும் அடிநாதமான கலாச்சார ஒருமை இல்லாமல் போய்விடவில்லை”என்பார் அவர். “சுதேசிகளான ஹிந்துக்கள் எவ்வளவுதான் வேற்றுமைகளுக்கிடையே இருந்தாலும் பொதுவான பண்புகளையும்,பொதுவான அபிலாஷைகளையும் கொண்டிருந்தார்கள்;ஒரு தேசத்திற்கான கலாச்சார,நாகரீக அஸ்திவாரமாக அது அமைந்தது”: என்பார் ஸ்ரீகுருஜி. அவர் கூறியபடி ஹிந்துத்வம் என்பது ஒரு கலாச்சாரத்தை,ஒரு நாகரீகத்தை குறிக்கும் கருத்தியல்; அது அரசியல் கோட்பாடோ,சமய நெறிமுறையோ அல்ல”என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பாரதத்தின் உச்சநீதிமன்றம் 1995 இல் தீர்ப்பு ஒன்றில், ‘ஹிந்துத்வம் என்பது ஒரு வாழ்க்கைமுறை அல்லது மனப்பான்மை என்று கருதுவது வழக்கம்;அதை மத அடிப்படைவாதம் என்பதுடன் ஒப்பிடுவதோ அவ்வாறு புரிந்துகொள்வதோ கூடாது’ என்று அறிவித்துள்ளது.தீர்ப்பு மேலும் கூறுகிறது: “ஹிந்துத்வம் அல்லாத மதங்களைச் சேர்ந்த எல்லோருக்கும் விரோதமானது என்று கருதுவது சட்டசம்மதமானதல்ல;ஏதோ ஒரு கட்சி பாரபட்சம் பார்க்கிறது அல்லது சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்கிறது என்று அதனுடைய கொள்கையை விமர்சிப்பதற்காக இந்த வார்த்தைகள் பயன்படுவதாய் இருக்கலாம்.”
நமக்குத்தான் தெரியுமே,ஹிந்துக்களாய் இருந்துகொண்டு போலி மதச்சார்பின்மைவாதிகளாய் திரிபவர்கள் ஹிந்துத்துவத்தை இழித்தும்,பழித்தும் பேசுவதும், பா.ஜ.க.வை குற்றம் சாட்டுவதும் நடக்கிறதே? இப்போது நரேந்திரமோடியையும் குறிவைத்து தாக்குகிறார்கள்- அவர் ஹிந்துத்துவத்தை கடைபிடிக்கிறாராம்.ஹிந்துயிஸத்திற்கும் ஹிந்துத்துவத்திற்கும் படுமோசமான எதிரிகள் ஹிந்து அல்லாதவர்கள் அல்லர்.ஹிந்து அல்லாத மதங்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக ஹிந்துயிஸத்தை தாறுமாறாக ஏசுகிற கும்பல் இருக்கிறதே அதுதான் மோசமான எதிரி.சமீபத்தில் கூட ஒரு டிவி நிகழ்ச்சியில் முருகக்கடவுளை அண்ணனாகவும்,விநாயகப் பெருமானை தம்பியாகவும் புனைந்து கேவலமாக நையாண்டி செய்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.இது போல,ஹிந்து அல்லாத மதத்தை கேலி செய்ய இவர்களால் முடியுமா?
இன்று,எப்படியெல்லாம் முடியுமோ, எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஹிந்துத்துவத்தை,ஹிந்துயிஸத்தை இழிவுபடுத்துவது ‘செக்குலரிசம்’ என்று ஆகிவிட்டது.விஷம் கக்கும் செக்குலர்காரர்கள் ஹிந்து ஹிந்துத்துவத்தை பாசிசம் என்று வர்ணித்து அறிவாளித்தனமாக காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறார்கள்.பாகிஸ்தானில் ஹிந்துக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்,அல்லது அந்த நாட்டைவிட்டே துரத்தப்படுகிறார்கள்.பாரதத்தில் முஸ்லீம்களை சரிசமமாக நடத்துகிறோம்.எவ்வளவு முடியுமோ அவ்வளவு சலுகைகளை அவர்கள் மீது பொழிவதற்கு ஓடோடிப் போகிறோம்.ராஜஸ்தானிலும் குஜராத்திலும் ஹிந்துக்களைவிட முஸ்லீம்களுக்கு சற்றே அதிக அளவு நிலம் சொந்தம் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?
மொத்தம் 7 பாரத மாநிலங்களில் ஹிந்துக்களைவிட முஸ்லீம்களுக்கு எழுத்தறிவுவிகிதம் அதிகம் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.முஸ்லீம்களின் நிலத்தை யாராவது பிடுங்கிக்கொண்டுவிட்டார்களா என்ன? ஒன்றுமில்லை;1990 களில் காஷ்மீரிலிருந்து 3,50,000 ஹிந்துக்கள் முஸ்லீம் ஆயுதம் தாங்கிகளால் அடித்து விரட்டப்பட்டார்கள்.ஹிந்துக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன;அவர்களின் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன;ஹிந்துப்பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.
பாரதத்தில்,தனது மதத்தில் ஒரு ஹிந்து பெருமிதம் கொள்வானானால் அவனை வகுப்புவாதி என்று தூற்றுகிறார்கள்;பாஸிஸ்டு என்று ஒதுக்குகிறார்கள்.உலகத்தில் இத்தனை தேசங்கள் இருக்கின்றனவே,எந்த நாட்டிலாவது பிரதமரோ ராணுவத்தின் தலைமைத் தளபதியோ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களோ இருக்கிறார்களா? அல்லது துணை ஜனாதிபதியொ வெளிவிவகாரத்துறை அமைச்சரோ முஸ்லீமா? அல்லது ஒரு ரோமன் கத்தோலிக்கர்,அதுவும் வெளிநாட்டுக்காரர்(இன்னும் அந்த நாட்டு பாஸ்போட் வைத்திருப்பவர்) தேசத்தின் பெரிய அரசியல் கட்சியின் ‘மேலிடமாக’ உட்கார்ந்திருக்கிறாரா? இதையெல்லாம் ஹிந்துக்கள் எப்போதாவது எதிர்த்ததுண்டா? இல்லையே?
“ ‘ஹிந்துயிஸம்,நாகரீகங்களின் மோதல்’ என்ற தனது நூலில் அமெரிக்க அறிஞர் டேவிட் ப்ராலி எழுதுகிறார்: நவீன இந்தியர்கள் எண்ணத்தில் ஒரு தோல்வி மனப்பான்மை புகுந்துகொண்டிருக்கிறது.இது போல வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. தேசத்தை அதலபாதாளத்திற்கு கொண்டு போவதுதான் இந்த தேசத்தின் கலாச்சார பெரும்புள்ளிகளுடைய தலையாய கடமையாக இருந்துவருகிறது.இந்த மண்ணின் மரபுகள்,பண்பாடு இவற்றிலிருந்து அடியோடு பெயர்ந்து விலகி நிற்கிறது. இந்தியாவின் படிப்பாளி வர்க்கம்,தேசத்தின் பண்பாட்டை இழிவுபடுத்துவதை ஒரு பொழுதுபோக்காக கருதும் நிலவரம் உலகத்தில் அநேகமாக வேறு எந்த நாட்டிலுமே பார்க்கக் கிடைக்காது.இந்த தேசத்தில் பெரும்பான்மை மதத்திற்கு ஆன்ம ஒளி உண்டு.ஆனாலும்,அது கேலிப்பொருளாக்கப்படும்;சிறுபான்மை மதங்களோ எவ்வளவுதான் வெறித்தனமாக இருந்தாலும்,முரட்டுத்தனமாக இருந்தாலும்,செல்லம் கொஞ்சப்படும்.இது போல் உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்க்கக் கிடைக்காது.”
அந்த நூலைப்படித்துப் பார்த்தால் தான் இதையெல்லாம் நம்மால் நம்பவே முடியும்.ஹிந்துத்வம் என்பது போற்றப்படவேண்டியது.ஆழ்ந்த பெருமிதம் கொள்ளப்படவேண்டியது.ஆனால்,மெக்காலே புத்திக்காரர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்ப்பது? ஹிந்துத்துவத்தை சிறுமைப்படுத்தும் இந்தியப் படிப்பாளி வர்க்கத்தைப் பற்றி டேவிட் ப்ராலி பேசுகிறார்:அது உண்மையில் படிப்பாளி வர்க்கமல்ல;ஹிந்து வெறுப்பை தொழிலாகக் கொண்ட கும்பல்;அந்த கும்பலுக்கு ஊடகத்தில் செல்வாக்கு உண்டு.தேசத்தின் கழிசடைத்தனமான சிந்தனையாளர்கள் இவர்கள்.மகத்தான பாரம்பரியம் கொண்ட ஒரு மதத்தை கேவலப்படுத்துகிறவர்கள் இவர்கள்;:இதைப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள்.
தாரக் ஃபதா என்ற பாகிஸ்தானிய அறிவுஜீவி 2013 ஜீன் ‘பாரதிய பரக்ஞா’ என்ற இதழில் பின்வருமாறு பேசுகிறார்: “முஸ்லீம்கள் செல்வாக்குள்ளவர்களாக பயமே இல்லாமல் நடமாடுவதை பாரதத்தில் மட்டும்தான் என்னால் காணமுடிந்தது;ஒரு முஸ்லீம் என்கிற முறையில் அது சுவாரசியமாக இருந்தது.” அந்த நாளில்,அதாவது 1947 இல், ‘செக்குலர்’ என்ற வார்த்தையை எல்லோரும் மதித்தார்கள்; ஒரு விசேஷ அர்த்தம் அதற்கு இருந்தது.இன்றோ ஆட்சிபீடத்தைப் பிடிப்பதற்காக சிறுபான்மையினருக்கு வேப்பிலை அடிக்கும் சடங்கு என்று அதற்கு அர்த்தம் வந்துவிட்டது.
நிதீஷ்குமாரைப்பாருங்கள். காங்கிரஸ் கட்சியைப் பாருங்கள்.அந்தக் கட்சியின் பேச்சாளர்கள் பண்பாடற்ற முறையில் அசிங்கமாக கொக்கரித்தபடி திரிகிறார்கள்.அதன் மேலிடமோ அரசியல் விவாதத்தை எவ்வளவு மட்டரகம் ஆக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆக்கிவிட்டது.தன் முகத்தில் தானே கரிபூசிக்கொள்வது பேஷனாகிவிட்ட அவலமான ஒரு தேசத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நன்றி:நியூஸ் டுடே.
(கட்டுரையாளர் எம்.வி.காமத் அவர்கள் பிரசார் பாரதி அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்; ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா இதழின் முன்னாள் ஆசிரியர்)
தமிழில்:விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம் 14,15,16;வெளியீடு 19.7.2013


Tuesday, August 27, 2013

நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியைப் பெற(28.8.13 முதல் 19.9.13வரை) ஒரு அரிய வாய்ப்பு!!!

கடந்த 25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருப்பவர் நமது ஆன்மீக குரு.ஐயா சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் அவர்கள்!!!ஐயா அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் ஏராளமான மனிதர்களின் பலதரப்பட்ட பிரச்னைகள் தீர காரணமாக இருக்கின்றன;
 கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்,இந்தியாவின் பெரும்பாலான மாநகரங்களைச் சேர்ந்தவர்களும் ஐயாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்;எந்தவித பிரதிபலனின்றி தமது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகளால் ஐயா அவர்கள் பிறருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்; 
சிலரது பிரச்னைகள் 18 வருடங்களாகவோ,அல்லது 20 வருடங்களாகவோ,அல்லது 30 வருடங்களாகவோ இருந்திருக்கின்றன;இந்தப் பிரச்னைகளில் குழந்தைப்பேறின்மை,பூர்வீகச் சொத்துப் பிரச்னை,முன்னேற்றத்தை சூட்சுமமாகத் தடுக்கும் செயல்களால் குடும்பத்தினுள் குழப்பம் அல்லது தீராத நோய்,தொழில் முடக்கம்,நீண்ட காலக் கடன் அல்லது வராக்கடன்,திருமணத் தடை,தொழில் கூட்டாளிகளுடன் பிரச்னை,விபரீதமான நோய்கள் அல்லது சுபாவங்களால் கணவன்  மனைவிக்குள் ஒற்றுமையின்மை,பித்ரு தோஷம்,பிடித்த துறையில் சாதிக்க முடியாமல் தடுமாறுதல்,வீண் பழி மற்றும் அவமானத்தால் தனிமையில் விரக்தியோடு வாழ்ந்து வருதல்(ஆனால்,இவர்களின் மனதில் தாம் தமது குடும்பத்தாரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்);கடுமையான கர்மவினைகளை ஜோதிடத்தின் மூலமாகவோ,ஜீவ நாடியின் மூலமாகவோ அறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தும் கூட தாம் நிம்மதியான மற்றும் வசதியான வாழ்க்கை வாழ முடியாமல் தவிப்பவர்கள்;
பலருக்கு நல்ல வேலை அல்லது தொழில் இருந்தும் கூட அவர்கள் மனதில் தாம் விரும்பும் சித்தரை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்;சிலருக்கு தாம் இந்தப் பிறவியிலேயே சித்தராக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பார்கள்;
சிலர் சிவ வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு அல்லது சித்தர் உபாசனை அல்லது முன்னோர்கள் உபாசனை அல்லது மகான்கள் உபாசனையை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும்;குலதெய்வத்துடன் நேரடியாகப் பேச வேண்டும் என்ற எண்ணங்கள் அடிக்கடி மேலோங்கும்;
சிலர் ஆன்மீக வாழ்க்கையில் வாசி யோகம்,குண்டலினி சக்தியை எழுப்புதல் முதலான ஏராளமான முயற்சிகளுக்கு தகுந்த குருவைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

சிலர் மூலிகைகள்,பஞ்சாங்கத்தின் துணை கொண்டு சித்தராக முயற்சி செய்வதும் உண்டு;சரியான குரு கிட்டாமல் ஏங்கிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.
மேலே கூறப்பட்டிருக்கும் ஆன்மீக முன்னேற்றத்தினை விரும்புபவர்கள் நமது ஐயா அவர்களை தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் நேரடியாக சந்திக்கலாம்;
முன் அனுமதியைப் பெற: ஆன்மீகக்கடல் கை.வீரமுனி 9092116990 என்ற எண்ணுக்கு அழைக்கவும். ஒரு நாளில் ஏதாவது இரண்டு மணி நேரம் மட்டும் இந்த எண்ணில் பேசலாம்; மிஸ்டு கால் தருவதைத் தவிர்க்கவும்.ஐயாவை டெஸ்ட் பண்ணுவதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்;
ஐயாவை சந்தித்து ஆசிர்வாதம் பெறும் போது நீங்கள் என்ன வேண்டுகிறீர்களோ,அந்த வேண்டுதல் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறும்.அவ்வாறு,நிறைவேறியப் பின்னர்,சந்திக்க அனுமதி கிட்டும்;ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து,ஆசி பெற்றுவிட்டு மட்டும் செல்லவும்;
நமது ஐயாவைச் சந்திப்பதன் மூலமாக நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை அமையும்!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

Sunday, August 25, 2013

ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். இதோ..  அவரை வழிபடும் சில ஸ்லோகங்கள். இவற்றை உள்ளன்போடு பூசியுங்கள். தினம்தோறும் காக்கைக்கு உங்கள் கையால் உணவிட்டு வாருங்கள். பாவங்கள் தொலையும். நன்மைகள் விளையும்.
நற்பவி! நற்பவி! நற்பவி!
ஓம் ஸ்ரீ காகபுஜண்டீசுவர சுவாமிநே நம:
ஸ்ரீ காகபுஜண்ட தியானம்
   த்விபுஜம் சத்வி நேத்ரம் ச
   ஜடாமகுட தாரிணம்
   காகதுண்ட முகம் சாந்தம்
   பஸ்ம ருத்ராஷ தாரிணம்
   முத்ரோ ருத்வய ஹஸ்தம்ச
   சிவசிந்தன மானஸம்
   பக்தா பீஷ்ட்ட ப்ரதம் தேவம்
   பாவயே முனி புங்கவம்.
   ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி
  1. ஓம் புஜண்ட தேவாய ச வித்மஹே
   த்யான ஸ்தீதாய தீமஹி;
   தந்நோ பகவான் ப்ரசோதயாத்.
  2. ஓம் காக ரூபாய வித்மஹே
   தண்ட ஹஸ்தாய தீமஹி;
   தந்நோ புஜண்ட ப்ரசோதயாத்.
  3.  ஓம் காக துண்டாய வித்மஹே
   சிவசிந்தாய தீமஹி;
   தந்நோ யோகி: ப்ரசோதயாத்.
   ஓம் ஸ்ரீ பஹூளாதேவி சமேத
   ஸ்ரீ காக புஜண்ட தேவாய நம:
ஸ்ரீ காக புஜண்டரின் அருளால் இதனை உள்ளன்போடும் பக்தியோடும் படிப்பவர்கள் அனைவருக்கும் எல்லா நன்மையும் விளையட்டும்!

நற்பவி! நற்பவி! நற்பவி!

Click Here to see more

Thursday, June 27, 2013

ஆன்மிக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

ஆன்மிக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

படித்ததை உங்களுடன்

ஞான ஆலயம் ஜனவரி 2013 இதழில் வெளியான சிறப்புக்கட்டுரை
தமிழில்ச.நாகராஜன்

விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க்

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.



ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.


பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.



அந்த ஆறு முக்கிய பகுதிகள் : 

1) முன் மடல் (frontal lobe) 



2) லிம்பிக் அமைப்பு (limbic system)

3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate

4) அமிக்தலா (amygdale) 

5) தாலமஸ்(thalamus) 

6) சுவர் மடல்(parietal lobe)



தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. 
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!





நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.






ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

ஆகவே 
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு 
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.

தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.

மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!


இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!


Wednesday, May 29, 2013

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(1.6.13சனிக்கிழமை) வழிபாடு!!!


நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;


பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ணதாதேவியின் இடுப்பில் கைவைத்தபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் இருக்கிறாராம்.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.                                            26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)                             28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
29.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.

வைகாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=31.5.13 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி பதினொரு நிமிடத்தில் இருந்து 1.6.13 சனிக்கிழமை மாலை மணி ஐந்து,நிமிடம் ஐம்பத்து நான்கு வரை அமைந்திருக்கிறது.(சனிக்கிழமை ராகு காலம் காலை ஒன்பது முதல் பத்து முப்பது வரை)சனிக்கிழமையில் வருவதால்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி :ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=30.6.13  ஞாயிற்றுகிழமை முழுவதும்   அமைந்திருக்கிறது.(ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை நான்கு முப்பது முதல் ஆறு மணி வரை!!!)


ஓம் சிவசிவ ஓம்
 நன்றி 

http://www.aanmigakkadal.com/

Wednesday, April 17, 2013

பைரவ சஷ்டி கவசம்!!!




வணங்குவோர்க்கு வாழ்வு தரும்
வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும்
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்
நினைத்தாலே நிம்மதி தரும்
நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
பக்தர் பரவசமுற பலன் தரும்
பைரவர் திருவடியே கதி
சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்
திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர்
அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்
சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்
சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்
சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்
வருக வருக வடுகபைரவா வருக
வளம்தர வருக வஜ்ரபைரவா வருக
வருக வருக உக்கிரபைரவா வருக
உவகைதர வருக உலகபைரவா வருக
பைரவி போற்றும் பைரவா வருக
ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக
ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக
ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக
காலத்தின் நாயகா கால பைரவா வருக
கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக
நலம் தரும் நரசிங்க பைரவா வருக
நாளும்காக்கும் நாக பைரவா வருக
கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக
ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக
தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக
மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக
அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக
குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக
உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக
திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக
சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
ருசியான  உணவுதரும் ருருபைரவா வருக
சந்தோஷம் தரும் சம்கார  பைரவா வருக
பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக
வருகவருக வரமருளும் வரதபைரவா வருக
தருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக
பருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
பெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக
நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக
சதிராடும் சர்ப்ப பைரவா வருக
ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக
பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக
சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
முப்புரமெரி செய் முக்கண்ணும்
முகவழகு கூட்டும் நாசியும்
சீற்றம் காட்டும் சிங்க பல்லும்
இடது செவியில் பொன்னாபரணமும்
இன்பமூட்டும் இள நகையும்
அழகிய தோளும் அற்புத அழகும்
மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்
எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
இளமை காட்டும் வாலிபமும்
மணி ஓசை தரும் கிண்கிணியும்
கையிலே கபாலமும் சூலமும்
தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்
ஏற்றம் தரும் தோற்றமாய்
பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
பரவசம் தர வருகவே வருகவே
மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
உய்ய வழிகாட்டும் உத்தமரே
பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
சேய் மகிழ விரைந்து வருவீரே
ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
அன்னை பார்வதி மனம் நொந்திடவே
ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி
அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்
தலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்
தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே
பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே
கற்றவர் போற்றும் காசியாம்
பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
எங்கும் திரிந்தான் பரமன்
காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே
மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே
ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை
வீடு தேடியொரு வேளையிலே
பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்
தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே
எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
அழிந்திடத் தான் வேண்டுமென்றே
பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே
பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்
காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்
கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்
மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்
எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்
முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
ஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே
இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
இடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்
விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
கபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு
கண்ணான கணவன் மயங்கிவிழவே
கதறி அழுதிட்டாள் மகாலட்சுமி
கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்
மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ
மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.
அந்தகாசுரனென்னும் புதல்வனும் அசுரனானான்
அகிலத்தையே ஆட்டி படைத்தான்
அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்
அவனை அழித்து அல்லல் அகற்றினார்
மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்
இனியொரு விதி செய்தே மக்களை காக்க
கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
மதிகெட்டவர்களை அழித்திட்டார்.
முண்டகன் என்றொரு கொடியவன்
கண்டபடி தந்தான் துன்பங்களை
அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்
பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே
எண்ணங்களிலே மாற்றம் தரும்
இதயத்திலே எழுச்சி தரும்
அடியவருக்கு அருள்புரியும்
பைரவ புராணத்தை பாடிடுவோம்
காலத்தின் நாயகன் கால பைரவனென்றே
ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே
விதியும் அவனே வெற்றியும் அவனே
வேதமும் அவனே வேதநாயகனும் அவனே
அட்டவீரட்ட தலங்கள் அற்புதத்தலங்கள்
ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
அம்பலவாணன் பைரவரூபமான இடங்கள்
அகிலத்தோரை காத்திட தலங்கள்
தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
ஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்
அத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே
எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
ஐந்து தலையரசே ஆகாசபைரவரே
அல்லல் நீங்கிட வருவீரே
தலைதனை தராபாலன பைரவர் காக்க
கேசந்தனை கேசர பைரவர் காக்க
நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க
கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க
செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க
நாசிதனை நர்த்தன பைரவர் காக்க
வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க
நாக்கினை நானாரூப பைரவர் காக்க
கழுத்தினை கராள பைரவர் காக்க
தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க
கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க
மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க
விலாவினை விருபாச பைரவர் காக்க
வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க
இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க
மறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க
தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க
முழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க
பாதமிரண்டும் பரம பைரவர் காக்க
விரல்களைத்தும் விஜய பைரவர் காக்க
இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி
சங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி
சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி
உயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி
உன்மத்தம் போக்குவாய் போற்றி
குருட்டை நீக்குவாய் போற்றி
கர்ப்பதோஷம் போக்குவாய் போற்றி
உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி
ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி
இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி
சளித்தொல்லை போக்குவாய் போற்றி
சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி
விஷபயம் போக்குவாய் போற்றி
பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி
விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி
பகைமையை அழிப்பாய் போற்றி
உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி
அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி
தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி
முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி
நல்லதொரு துணைதருவாய் போற்றி
துணையின் துன்பம் களைவாய் போற்றி
சந்தானபாக்கியம் தருவாய் போற்றி
புத்திரதோஷம் போக்குவாய் போற்றி
கடன் தொல்லை நீக்குவாய் போற்றி
களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி
என்றும் புகழ் தருவாய் போற்றி
ஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி
பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி
பில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி
கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி
பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி
சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக
பாசமிகு பைரவமூர்த்தியே வருக
காலனைவிரட்டும் கால பைரவா வருக
ஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக
கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக
பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக
சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக
சந்ததிதரும் சந்தான பைரவா வருக
ஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக
சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக
வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக
நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக
சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக
தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக
விசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக
ஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக
குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக
கல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக
மேன்மை தரும் மேகநாத பைரவா வருக
சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக
கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக
அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக
சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக
பூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக
தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக
காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக
லாபம் தரும் லோகபால பைரவா வருக
பூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக
ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக
கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக
அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக
தட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக
வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக
அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக
பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
குலம் காக்கும் குல பைரவா வருக
சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக
ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக
சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக
சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக
கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக
குற்றம் களையும் குலபால பைரவா வருக
சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக
கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக
புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக
லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக
நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக
சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக
கஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக
பிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
மண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக
விருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக
சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக
கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக
பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக
எதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக
சோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக
பீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக
பூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக
ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக
பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக
வினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக
நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக
சக்திக்கும்  பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக
அட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக
பைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக
பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக
ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக
முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக
பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்
சண்முகசுந்தரம் பாடிய கவசம்
நவபைரவர் அருளும் நற்கவசம்
பைரவ சஷ்டி கவசம் இதனை
செப்பிடுவோர் ஜெகமாள்வர்
ஓதுவோர் ஓங்குபுகழ் பெறுவர்
கூறுவோர் கூற்றனை வெல்வர்
வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
சொல்வோர் சொத்துக்களை பெறுவர்
கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்
சரணம் சரணம் பைரவா சரணம்
சரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்
சரணம் சரணம் திருவடி சரணம்

இயற்றியவர்:பண்ணாரிதாசன் என்ற சோம.சண்முகசுந்தரம்,சேலம்

ஓம்சிவசிவஓம்

Total Pageviews

Followers