Thursday, September 27, 2018

தேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்..!




தேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்..!
🐝🐝🐝🐝🐝🐝🐝🐝

🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இனிக்கும் செய்தியல்ல....!

🐝தேனீ...
.............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?

முதலில்... ஆச்சரியம்.

🐝தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.

🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது.

🐝யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம். 
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.

🐝இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன.

ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...

🐝அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான்.

🐝ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது.

🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ.

🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

🐝 மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும்.

🐝ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

🐝இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை.

🐝ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை.

🐝மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

🐝தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது.

🐝தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.

🐝ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும்.

🐝கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு.

🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

🐝அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது?

🐝குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது.

🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.

🐝அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும்.

🐝அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

🐝கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

🐝பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும்.

🐝இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும்.

🐝தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள்.

🐝அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம் !

🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.

🐝புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும்.

🐝அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.

🐝உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.

🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.

🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.

வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.

🐝இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.

🐝தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''

🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. 
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

🐝இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.

🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.

🐝ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும்.

🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

🐝பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

🐝அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.

🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.

🐝இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும்.

🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள். 
🐝அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

🐝இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.

🐝அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள்.

🐝பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’

Tuesday, September 25, 2018

கோபத்தை வெளிப்படுத்த உதவும் மண்ணீரல் (GALLBLADDER)



மண்ணீரல் (Gallbladder) நமது உடலின் உள் உறுப்புகளில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று.  மண்ணீரல், இது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகவும். நிணநீர் உறுப்புகளில் மிக பெரிய உறுப்பு மண்ணீரல் தான்.

இது ரெட்டிகுலார் செல்கள் மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளால் ஆன வலைப்பின்னல் அமைப்புக்கொண்டது .
முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை அழிப்பதே மண்ணீரலின் முக்கிய பணியாகும். மேலும், இரத்த சிவப்பணுக்களின் செயல்களைச் சீர்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் இதன் வேலைதான். 

ஆரம்பத்தில் கருவில் வளரும் கரு குழந்தையின் இரத்தச் சிவப்பணுக்களை உருவாக்குவதும் மாநில தான். குழந்தை பிறந்தவுடன் இரத்தச் சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன . ஆனால் அவ்வாறு உருவாகும் அணுக்கள் முழுமையாக பக்குவம் அடைவதற்கு மண்ணீரல் தான் உதவுகிறது.


கோபம் எப்படி வருகிறது தெரியுமா?

மண்ணீரலில் சுரக்கும் ஒருவகை நீர் இரத்தத்தில் கலந்து மூளைக்கு சென்று அங்கேயுள்ள நுண்ணறைகளை பாதிக்கிறது . அதனால் தான் நமக்கு கோபம் உண்டாகிறது.

மண்ணீரல் பாதிக்கப்பட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். நுரையீரலின் செயல்பாடுகளிலும் மண்ணீரலுக்கு பங்கு உண்டு.

இரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை அழித்து, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மண்ணீரல் தூண்டுகிறது. அதேபோல் இரத்த ஓட்ட பாதையில் கிருமிகள் போன்ற வெளிப்பொருட்களை வடிகட்டி வெளியேறவும் செய்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கச் செய்வதும், வியர்வைச் சுரப்பிகளை தூண்டி அவைகளை செயல்பட வைப்பதும் மண்ணீரல் தான்.

அடிக்கடி கோபம், எரிச்சல், மனா அழுத்தம் அடைவோருக்கும் மது பழக்கம்,புகைப்பழக்கம் உள்ளோருக்கு மண்ணீரல் பாதிக்கப்படக்கூடும். கல்லீரல், பித்தப்பை, இரைப்பை சிறுகுடல் பகுதிகளில் எதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிக்கப்படலாம். 

அடிவயிற்றில் கடுமையான வலி, நாக்கு வறண்டு விறைப்புத் தன்மை அடைவது, வாயுக்களால் உடலெங்கும்  வலி போன்றவை மண்ணீரல் பாதிப்பை உணர்த்தும்.


நேர்மையான எண்ணங்கள், அமைதி, பொறுமை, தியானம், யோகா மற்றும் சத்தான உணவுகள், பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் ஆழ்ந்த தூக்கம் இவை அனைத்தையும் கடை பிடித்தால் வாழ்வில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாழலாம்.











Friday, September 21, 2018

இணைய வழி கல்வி - தமிழ்நாடு +1 மற்றும் +2 மாணவர்களுக்கு


தமிழக அரசுக்கும்,பள்ளிக் கல்வித்துறைக்கும்,SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!

கிராமப்புற ஏழைப் பிள்ளைங்களுக்கும்,தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கும் இப்ப நல்லாவே chemistry work out ஆகுது.

என்னான்னு கேக்குறீங்களா..11-வது chemistry new bookல உள்ள கடினமான,முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையா,புரியும் படியா video lessons பண்ணிருக்காங்க.

sema work.extraordinary plan.conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.

English,தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.

இந்தாப்பா...இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.

வாத்தியார் இல்லன்னாலும் சரி,நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும்,தெளிவா புரிஞ்சிரும்.

TN SCERT ..அப்பிடீங்ற  You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.

இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.

freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.

கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் போய்ச் சேரவேயில்ல.

Tuition வருமானத்திற்காக பல பேர் இதைச் சொல்லுறதேயில்ல.

ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.

what's app,face book media வுல share பட்டன அழுத்துங்க.

பிடிச்சதோ,பிரச்சனையோ உடனே share பண்ணுறோம்ல.
அதே போல இதையும் share    .

இனி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல நல்ல கல்வியும்,மருத்துவமும்,உயர் கல்வியும்.

ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.

Monday, August 6, 2018

வயிற்று வலியா?-என்ன பிரச்சனை என்று எப்படி அறிந்து கொள்வது?

வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம். 

சிறிது விசய ஞானத்தோடு வயிறு வலியினை புரிந்து கொண்டால் மன பயம் விலகும்.



வயிறு ஒரு பை மாதிரி. முக்கிய உறுப்புக்களான - கிட்னி, பித்த பை , கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கணையம் , சிறு நீர்பை, கர்ப்பப்பை,சினைப்பை (பெண்களுக்கு) மற்றும் விந்துபை (ஆண்களுக்கு), என்று அனைத்து ராச உறுப்புகளும்  வயிற்றில் உள்ளன.

ஆனால், இதை  எப்படி நீங்கள்  தெரிந்துகொள்ளலாம் ? 



வயிற்றின் மேலிருந்து கீழ் வரை மூன்று பகுதியாவும் மற்றும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரகற்பனை செய்து பார்க்கவும்.

அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும். 

அதாவது மேல், நடு (தொப்புள் பகுதி) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் பகுதி) மற்றும் வலது பகுதி.

1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா -  கல்லீரல்  அல்லது  பித்தப்பை பிரச்சனை

2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால்  - அல்சர் அல்லது வயிற்று புண் .

3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு அல்லது கிட்னி பிரச்சனை 

4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால்  - உணவு ஒவ்வாமை  அல்லது ஃபூட் பாய்சன்.

5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,

6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போது  என்ன பிரச்சனைன்னு என்று  தெரிந்து கொண்டீர்கள், 
அப்பிரச்சனைக்கு திர்வு காணுங்கள்! 

Sunday, August 5, 2018

பல் சொத்தை - வீட்டு வைத்தியம்

பல் சொத்தையால் அவதியா ??? 

எளிய வீட்டு  வைத்தியம் மற்றும் நிரந்தர தீர்வு!!!

பல் சொத்தை  முதல் கட்டத்தில் இருந்தால்,  கீழ்கண்ட வீட்டு வைத்திய குறிப்பு 100% குணமடைய செய்யும் .



கீழ்கண்ட வைத்திய முறைகளை தவறாமல் செய்தால் குணமடைவது உறுதி. மேலும் கீழ்கண்ட எதாவது ஒரு முறையை வரம் தோறும் கடை பிடித்ததை பல் சொத்தையாவதிலிருந்து விடுபடலாம் அல்லது பாதுகாத்து கொள்ளலாம் .


1. ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்தவுடன் 3-5 கொய்யா இலைகளை கழுவி நன்கு மெல்லவும் . கொய்யா இலைகளை மெல்லும் பொது வாயில் எச்சில் நன்கு ஊறும். இந்த சாறு மற்றும் நுண்ணிய இலைகளை வாயில் 15-30 நிமிடம் வைத்திருக்கவும் . பிறகு வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் போடி மற்றும் உப்பு சேர்த்து 5-10 முறை வாய்  கொப்பளிக்கவும் . 





2. புளிய இலைகளையும், மஞ்சள் பொடியும் மற்றும் உப்பு  சேர்த்து  200 மில்லி நீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, சிறுது சூடு ஆறியவுடன் 10-20 முறை வாய் கொப்பளிக்கவும். 







3. இரண்டு கிராம்பு அல்லது லவங்க பூவை வாயிலிட்டு நன்றா மென்றால் வாயில் எச்சில் நன்றா உறும், பிறகு 10-20 நிமிடம் இந்த சாற்றை வாயில் வைத்து துப்பி விடவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.


4. காலை மற்றும் இரவில் கீழே குறிப்பிட்ட மூன்று பொருட்களை கொண்டு பல்துலக்கவும்.
கடுக்காய் பொடி, மஞ்சள் பொடி  மற்றும் உப்பு மூன்றையும் சரியளவு கலந்து பல்பொடியாக உபயோகிக்கவும் . 




மேற்குறிய முறைகளை எந்த வரிசையில் வேண்டுமானாலும்  செய்யலாம். ஆனால் 4 முறைகளையும் ஒருமுறையாவது ஒரு நாளைக்கு கட்டாயம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் 
lakshmi_mailme@rediffmail.com

நலம்பெற வாழ்த்துக்கள்!!!

Sunday, June 24, 2018

கால் வெடிப்பு குணமாக எளிய வீட்டு வைத்தியம்



1. விளக்கெண்ணெய்  2 தேக்கரண்டி 
2. சுண்ணாம்பு சிறிதளவு (3 மிளகு அளவு)
3. சிறிது மஞ்சள் பொடி 
4. மேற் கூறிய இந்த மூன்று பொருளையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவும் 
5. தினமும் இரவில் 3-5 நாட்கள் கல் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரவும் 

விரைவில் குணமாவதை நன்கு உணரலாம்

பாட்டி வைத்தியம்/ வீட்டு வைத்தியம்


உடல் சோரவை போக்க:
ஒரு டம்ளர் அண்ணாசிப் பழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலை அருநதி வந்தால் உடல் சோர்வு குறையும்

மயக்கம்:
அடிக்கடி மயக்கம் ஏற்படும் நபர்கள் காப்பி,தேனீர்க்கு பதில் எலுமிச்சை பழச்சாற்றை குடிப்பது நல்லது.

கை, கால் வலி:
சுக்கு50 கிராம் ஆவாரம்பட்டை  50 கிராம் அளவு எடுத்து 200மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டு வர கை, கால் வலி போகும்.

விஷம் முறிவு:
விஷம் உள்ள வீட்டுப்பூச்சிகள் கடித்து விட்டால் ஆடாதொடையை சுத்தம் செயது அரைத்து சிறிதளவு வெந்நீரில் கலந்து குடிக்க விஷம் முறியும்.

கால் வலி:
முருங்கை பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து பின்பு அதை மைய அரைத்து கால் வலி ஏற்பட்ட இடத்தில் பூச வலி குறையும்.

உடலில் ரத்தம் விருத்தி:
தினமும் ஒரு செம்பருத்தி பூவை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சூடு தணிந்து இரத்தம் விருத்தியாகும்.

உள்ளங்கை, கால் வியர்வை நிருத்த: 
இருவேளை இலந்த மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவி வர உள்ளங்கை& கால் வியர்வை நின்று விடும்.

முகத்தில் கரும்புள்ளி:
வெள்ளரிக்காயை அரைத்து கரும்புள்ளி மீது தடவி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வநதால் கரும்புள்ளிகள் குறையும்

*வெள்ளை நோய் ,உடல் சூடு,கண் எரிச்சல் குணமாக*

           பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டி அளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரண்டு நாள் இரவு முழுவதும் வைத்து  மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் காலை வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்பட்ட வெள்ளை நோய் குணமாகும்.

குளியலுக்கு….

மூலிகை குளியல் எண்ணெய் தயாரிக்க

 சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோ எடுத்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் தினமும் ஐந்து முதல் 8 மணி நேரம் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான இயற்கை வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் எண்ணெய் உடல் எரிச்சல்,பாத எரிச்சல்,உடல் ஊறல்,வெட்டைச்சூடு,ஜனன உறுப்பு நோய்கள் குணமாகும்.!

Total Pageviews

Followers