Wednesday, March 28, 2012

தமிழ் மொழி



நாம் வாழும் அண்டமானது ஐம்பெரும் பூதங்கள்,  ஒன்பது கோள்கள், ஏழு தாதுகள், இருபத்து ஏழு நட்சேத்திரங்கள், ஆயிரத்து எட்டு அண்டங்கள் கொண்டதாக
விளங்குகின்றது. இவற்றையே "இயற்கை" என்கின்றோம். தமிழ் மொழியானது "இயற்கை"யிலுருந்து தோன்றியது. தமிழில் இயற்கையின் "செறிவை" நன்கு உணரலாம். மொழி என்பது காற்றின்  இயக்க  ஆற்றலாகும். காற்றின் இயக்கம் என்பது சுருங்கி விரிதலாகும். உடலில் காற்றை  உள்ளிழுத்தைலையும், வெளியேற்றலையும் குறிக்கும். தமிழ் மொழியானது  முற்றிலும் வேறுபட்ட  நான்கு வகையான ஓசைகளை உடையது. அவையன உயிர் ஓசை ,மெய் ஓசை, உயிர்மெய் ஓசை, ஆயுத ஓசை எனப்பவாம். இவற்றை  வரி வடிவமாக எழுதுவதே  "எழுத்து" என்பதாம். நமது உடலில் ஐம்பூதத்திற்கேற்ப , அ-ஆ,  இ-ஈ, உ-ஊ, எ-ஏ, ஒ-ஓ என்ற ஐந்து வகை உயிர் எழுத்துக்கள் உள்ளன. க்-ங் ச்-ஞ் ப்-ம், வ்-ட்-ண்-ள், ற்-ன்-ல், ர்-ழ்-ய் என்னும் ஏழு வேறுபட்ட ஒசைகளுடைய மெய் எழுத்தாக உள்ளது. இவைகள் உடலில் ஏழு நாடி நரம்புகளாக உள்ளன. நாடிகளை இயக்குவதாகவும் இருக்கின்றன. உயிர் எழுத்துக்கள் ஈரலை சுருங்கவும், விரியவும் செய்வதன் மூலம் உயிராற்றலை வளர்க்கின்றன. உயிர்மெய் எழுத்துக்கள் ஒரே நேரத்தில் காற்றை சுருங்கவும், விரிக்கவும், உள்ளிழுத்தலையும், வெளியேற்றலையும் செய்ய வல்லவை. ஆயுத எழுத்து என்பது மூச்சோடாத நிலையில் நிறுத்தும் சக்தி பெற்று விளங்குகிறது. மேற்குறித்த நான்கு ஒலிகளைதான்  நான்கு "மறைகள்" என்கிறோம். இதை "ஒலி மறைவு" என்கிறோம். ஒலிகள் மறைவாக உள்ளன என்பதாம். நமது உடல் மார்பு,வயிறு,இடுப்பு என்னும் மாறுபட்ட செயல்களுடைய உறுப்புகளை  கொண்டுள்ளது. மார்பு- காற்று அறையாகும். வயிறு- உணவு அறையாகும். இடுப்பு- காம உறுப்புகளை கொண்ட அறையாகும். காற்றால் உயிர் வளர்கிறது(ஈரல்). உணவால் உடல் வளர்கிறது( ஏழு நாடிகள்). காம உறுப்புகளால் ஆன்மா வளர்கிறது(பிறப்பு). இவற்றை தான் "முத்தமிழ்" என்கிறோம். இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ் இல்லை. ஏனென்றால் இது எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. காற்றானது உடலில் வலது, இடது, நடு என்று பகுந்து ஓடுவதன் மூலம் ஆண், பெண், அலி தன்மை கொண்ட எழுத்துகளையும், அவற்றின் மூலம் ஆண், பெண், அலி தோற்றங்களையும் உருவாக்குகின்றது. காற்றின் தோற்றம், உள் தோற்றம், வெளி தோற்றம், விரிதல், சுருங்குதல், உள்நிலை இருத்தல், வெளி நிலை இருத்தல், உறுப்புகளில் தங்கும் கால அளவு, வெளியேறும் கால அளவு, மாத்திரை அளவு, பகுதி, விகுதி, மார்பு (வல்லினம்), வயிறு(இடையினம்), தொடை பகுதி (மெல்லினம்) இவற்றில் உற்பத்தி ஆகுதல். நெடில், குறில் இவற்றை வரைமுறை படுத்தி தமிழ் இலக்கணம் செய்துள்ளனர் நம் பெரியோர்கள். இயற்கையான தமிழ் மொழியை தவிர மற்ற மொழிகள் யாவும் மானிடர்களால் உண்டாக்கப் பட்ட செயற்கை மொழியாகும். செயற்கையான இந்த மொழிகளில் இயற்கை நியதிகள் ஏதுமில்லை. தமிழ் மொழியின் சிதைந்த (கெட்டுப் போன ) மொழிகள் தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம், ஒரியா மற்றும் வட நாட்டு மொழிகள். முழுமையாக கெட்ட மொழிதான் ஆங்கிலம். தமிழ் சொற்களில் உயிரின் தோற்றம், உடல் பிறப்பு, ஆன்ம விரிவு போன்ற அரிய, பெரிய உண்மைகள் அடங்கி உள்ளன. மானிடர்களால் ஆக்கப் பட்ட எழுத்து, சொற்களால் ஆன்மா, உடல்,  உயிர், குறுகி விலங்கிகளாவும், மரம், செடி, கொடிகளாகவும், பறவை இனங்களாகவும், உடலற்ற பேய்களாகவும், மாயாவிகளாகவும், கீழ் பிறவிகளாகவும் தோற்றம் உண்டாகிறது. ஆகவே தமிழ் மொழியை தாழ்வில்லாமல் கற்று, ஆன்ம, உடல், உயிர் வளம் பெற்று வாழ்வோம்.
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
               
                                       பாரதிதாசன்

"சீரி ளமை திறம் வியந்து வாழ்த்துவோம்"
                        
                                                        திரு. வி.க

"தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம்"     - பாரதியார்


"என்னை நன்றாக படைத்த னன்
என்னை நன்றாக தமிழ் செய்யு மாறே"


                                                              திருமூலர்

என்றெல்லாம் போற்ற பெற்ற தமிழ் மொழியை பேசினாலும், தமிழன் என்று சொன்னாலும் "தீவிரவாதி"கள் என்று கூறி  கைது செய்து சிறையில் அடைக்கும் நிலையை எண்ணி வேதனை அடைகிறோம். இந்நிலை மாற தமிழர் அனைவரும் தமிழால் ஒன்றிணைந்து இழி நிலை கலைந்து வாழ்வோம்.


அனைவருக்கும் தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

Total Pageviews

Followers