Wednesday, March 28, 2012

சாகாக்கலை - உண்மையா?


சாகாக்கலை என்ற தமிழ் சொல்லை பழம் பெரும் சித்தர்களில் ஒருவரான "திருமூல நாதர்" தனது திருமந்திரம் என்னும் "தமிழ் வேதத்தில்" எடுத்தாண்டுள்ளார்கள். அதற்கான அறிவியல் கோட்பாடுகளுடன்  சாகாக்கலையை தனது ஓக சாதனை மூலம் இவ்வுலக மக்களுக்கு  "தெள்ளிய தமிழ்" மூலம் அறிவித்தார்கள். திருமூலரை தனது ஆன்மீக குருவாக போற்றி அவரின் கோட்பாடுகளை தெளிவாக புரிந்து கொண்ட "வள்ளல்" பெருமான் மேலும் இக்கலையை தமிழில்  சன்மார்க்கம் என்ற பெயரில் வழங்கினார்கள்.இக்கலையின் உன்னத  தன்மையை  தானே செய்து காட்டி மெய்பித்தார்கள். இன்றும் சல அறிவு குறைவுடையோர்  வள்ளளாரை எரித்து கொன்று விட்டார்கள் என்று கூறிவருகின்றனர். அவர்களை கண்டு வருத்தபட மட்டுமே முடிகிறது. சாகாக்கலை உண்மையா என்று இன்றைய விஞ்ஞான முறையில் விளக்கம் காண்போம்.

 ஒளி கதிர்களை குவியலாக ஒரு புள்ளியில் செலுத்தினால் அந்த இடம் தீ பற்றிக் கொள்கிறது. ஓசை அதிர்வுகளையும் இவ்வாறு செலுத்தினால் மலைகள் கூட தூள்களாக  மாறி விடுவதை நாம் காண்கிறோம். அதே போல்  காந்த அலைகளை குவிக்கும் போதும்  மின் ஆற்றல் உண்டாவதை அறிவியல்  நிகழத்தி காட்டியுள்ளது. மனோ சக்தியை மின் காந்த அலைகளாக  மாற்றும் திறன் பெற்றவர்களே சித்தர்கள் என்கின்றோம். இந்த காந்த சக்தியை வள்ளல் பெருமான் "கதிர் நலம்" என்கின்றார்கள். சித்தர்கள் ஓர் உயிரை கருணையோடு பார்த்தால் நன்மையும், கோபமாக பார்த்தால் தீமையும் ஏற்படுவதை நாம் கண்டுள்ளோம். உதாரணமாக கொங்கண சித்தர் கொக்கை எறித்த  உண்மையை அறிவோம். அவர் தன் கண்களில் அதிகமான "கதிர் நலம்"  கொண்டிருந்தார் என்பதே உண்மை. இதே போன்று தான் வள்ளல் பெருமான் தன் கண்களிலிருந்து வெளிபடும் "கதிர் நலம்"  யாருக்காவது துன்பத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்காக தன் முகத்தை கண்கள் வரை மூடிக்கொண்டிருந்தார்கள். இதை வள்ளல் பெருமான் "கதிர் நலம்" இரு கண்களில் காட்டு என்று அருட்பாவில் கூறுகின்றார்கள். சாகாக்கல்வி மூலம் உடலை கற்பூரம் போல்  மாற்ற முடியும் என்றும், தடையமே இல்லாமல் "மறைவு" செய்ய முடியும் என்பதையும் மெய்பித்தார்கள். அணுக்களை பிளக்கும் போது வெடிப்பும், தீப்பிழம்பும் உண்டாகும் என்று அறிவோம். மேலும் கதிர் வீச்சுகளும்( X-கதிர்கள், காமா கதிர்கள், ஆல்பா,  பீட்டா கதிர்கள், காஸ்மிக், டெல்டா கதிர்கள்) வெளிப்படும். இதே போல் ஓக மார்க்கத்தில் இவ்வாறு செய்யமுடியும். ஏனென்றால் அண்டத்தில் ஏற்படுவதை பிண்டத்திலும் ஏற்படுத்தலாம். இந்த கதிர்களை ஒருமுகமாக அழுத்தம் கொடுத்தால் அணுக்கள் ஆவியாகி விடும். எப்படியென்றால் நீராவி அணு (ஹைட்ரஜன்) மற்ற இதே நான்கு அணுக்களை சேர்த்து அழுத்தினால் அது எரியும் வாயு எனப்படும் ஹீலியம் ஆக மாறிவிடும். இதை மீண்டும் அழுத்தினால் தானே எரியும் "மீத்தேன்"  எனப்படும் எரியும் அணுக்காக மாறி  விடும். இதை போல் நம் உடலில் 96 பங்கு நீர் தான் உள்ளது(நீராவி அணுக்கள்) இதை சன்மார்க்கம் என்னும் ஓக மார்கத்தில் அழுத்தினால் "மீத்தேன்" பொன்ற தானே எரியும் அணுக்களாக இந்த உடல் அணுக்கள் மாறி விடும்.இது விஞ்ஞான, மெய்ஞான உண்மையாகும். இந்த மாதிரி  "மறைவு" செய்து கொண்டவர் தான் "வள்ளல் பெருமான்". இவரை யாரும் கொல்ல வில்லை. இது சத்தியமான உண்மை. இதே போன்று மாணிக்கவாசகர், ஞான சம்பந்தர், ஒளவையார், திருவள்ளுவர், நந்தனார், அருணகிரிநாதர், சுந்தரர், கரைக்கால அம்மையார், பட்டினத்தார் .....) இன்னும் பல சித்தர்கள் இந்த நிலையில் தன்னை இயற்கையோடு இனைத்துக்  கொண்டு தகுதி பொற்ற தன் மக்கள் முன்  "இறை காட்சி" தருகிறார்கள்.சாகாக்கலையின் முடிவு இது தான். இதை பல சித்த நூல்களில்  காணலாம். சன்மார்க்கம் ஒன்றே உயிர், உடல் துன்பங்களை களைந்து இன்பம் அளிக்கும் என்று வள்ளல் பெருமான் சித்தர்கள் கூறியதை வகுத்தும், தொகுத்தும்  எளிய முறையில் தந்தார்கள். சன்மார்க்கம் ஒன்றே நன்மார்க்கம் மற்றெல்லாம்  துன்மார்க்கம் என்றார்கள். வாழ்வியல் தருமத்திற்காக ஒவ்வொருவரும் 60 வயதிற்குள் கடமையாற்றி விட்டு சன்மார்க்கம் என்னும் தவ வழியில் செல்ல உறுதி எடுக்க வேண்டும். இல்லறம், துறவறம் இரண்டிலும் சன்மார்க்கமே அமைதியையும் சாந்தத்தையும் தரும்.முப்படைந்த காலத்திலும் இளமை காலத்திலும் மன அமைதி பெற சனமார்க்கத்தை தவிர வேறு வழியில்லை.
காலை, மாலை வள்ளளாரின் சாகாக்கலை பயின்று  அதற்கேற்ற உணவு பழக்கங்கள், சிந்தனை இவற்றை முறையாக செயல்படுத்தி அமைதியும், வளமும் பெற்று வாழ்வோம். வள்ளளார் இறை கலப்பு செய்த "தை திங்கள்  பூசத் திருநாளை" உலக மக்கள் அனைவரும் சன்மார்க்க நாளாக கொண்டாட வேண்டி அன்புடன் வேண்டுகிறோம்.

மரணமிலாப் பெருவாழ்வு பற்றி பெருமானாரின் சாற்றுக் கவிகள்.

"கற்றவரும் கல்லாடும் அழிந்திடக் காண் கின்றீர்
கலங்க வரும் மரணமும் சம்மதமோ?"


"இற்றினைத் தடுத்திடலாம் என்னோடு சேர்ந்திருமின்
என்மார்க்கம் இறபொழிக்கும்  சனமார்க்கந்தானே"

"மரணமிலா பெரு வாழ்வில்  வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன்  பொய்புகலேன் சத்தியஞ் சொல்கிறேன்
இறந்தாரை எடுத்திடும் போதரற்றுகின்றீர் உலகீர்
 இறவாத பெரும்வரம் நீர் ஏன் அடைய மாட்டீர்?"


"சிறந்திடும் சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடும் காண்."


"சதுமறை ஆகம  சாத்திரம் எல்லாம்
சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில்
சாகா  வித்தையை கற்றனள் தோழி"



"சன்மார்க்கம் பற்ற சாகா வரம் பெறல் நிச்சியம்
கற்றேன்சிற் றம்பலக் கல்வியை கற்றி கருணைநெறி
உற்றேன்எக் காலமும் சாகாமல்ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் பெற்றேன் உலகில் பிறநிலையைப் பற்றேன்
ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும் அழிவுறா
                                                          உடம்பும் மெய்இன்ப
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இவ்வாசகம் உணர்மின்"



"அருட்ஜோதி யானேன் என்று அறையப்ப முரசு
அருளாட்சி பெற்றேன்  என்று அறையப்ப முரசு
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்ப முரசு
மரணந் தவிர்ந்தேன் என்று அறையப்ப முரசு"


No comments:

Post a Comment

Total Pageviews

Followers